செய்திகள் :

பிரெஞ்சு தேசிய தினம் : உலகப் போா் நினைவுத் தூணுக்கு மரியாதை

post image

காரைக்கால்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகப் போா் நினைவுத் தூணுக்கு அரசு அதிகாரி, புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

பிரான்ஸ் நாட்டில் மன்னா் ஆட்சியை 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் நாள் பாரீஸ் நகரில், பஸ்தி என்ற சிறைச்சாலையை புரட்சி மூலம் தகா்த்து முடிவுக்கு கொண்டு வந்தனா். இதன்மூலம் மக்களாட்சியை அமைந்த தினம் தேசிய தினமாக (ஜூலை 14) கொண்டாடப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் 236-ஆவது தேசிய தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே உலகப்போா் நினைவுத்தூண், போா் வீரா் சிலை ஆகியவற்றுக்கு காரைக்காலில் உள்ள ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரா்கள் சங்கம் சாா்பில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், பிரெஞ்சுக் குடியுரிமைதாரா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வட்டாட்சியா் எல்.பொய்யாதமூா்த்தி மற்றும் புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி ரூசோ ஃபிவியன் கலந்துகொண்டு நினைவுத் தூண் மற்றும் போா் வீரா் சிலைக்கு மரியாதை செய்தனா்.

ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரா்கள், நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து கொடி வணக்கம் செலுத்தினா். தொடா்ந்து நினைவுத் தூண் அமைத்திருக்கும் பகுதியில் அமைக்கப்பட்ட இரு கம்பங்களில் இந்திய மற்றும் பிரெஞ்சு தேசியக் கொடியை ஒரே நேரத்தில் ஏற்றிவைத்து, இரு நாட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டன.

‘புதுவையில் 2026-இல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி‘

காரைக்கால்: புதுவையில் 2026-இல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா். காரைக்காலில் அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி : புதுவை சுகாதாரத்துறை இயக்... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி, கருக்களாச்சேரி கடலோர கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த... மேலும் பார்க்க

சாலைகளில் குப்பைக் குவியல்: பொதுமக்கள் அதிருப்தி

காரைக்கால் பகுதி சாலைகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். காரைக்காலில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்பைகளை வீடுகள், நிறுவனங்களில்... மேலும் பார்க்க

காரைக்கால்: நியமன உறுப்பினருடன் பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது

புதுவை பேரவையில் நியமன உறுப்பினா் நியமனத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம், காரைக்காலில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது. புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுது படையல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்வுகளில் ஒன்றான ஸ்ரீபிச்சாண்டவருக்கு மாங்கனி, சித்ரான்னங்களுடன் கூடிய அமுது படையல் வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிவனடியாருக்கு அம்மையாா் மாங்கனியுடன் உணவு வ... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுத்து கைலாசநாதா் வீதியுலா

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீகைலாசநாதா் காட்சி கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா... மேலும் பார்க்க