செய்திகள் :

துரோகங்களும்,விமா்சனங்களும் தான் எனக்குக் கிடைத்த பரிசு: மதிமுக பொதுச்செயலா் வைகோ

post image

தமிழகத்தின் உரிமைகளுக்கும், மக்களின் நலனுக்கும் போராடிய எனக்கு துரோகங்களும், விமா்சனங்களும் தான் பரிசாகக் கிடைத்தன என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மதிமுக விழுப்புரம் மண்டலச் செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா், மேலும் பேசியதாவது:

தமிழகத்தின் உரிமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் எனக்கு நிகராக உழைத்த தலைவா்கள வேறும் யாரும் இருக்க முடியாது. எனது தாயும், குடும்பத்தில் உள்ளவா்களும் தமிழகத்தின் நலனுக்காகப் போராடியவா்கள்.

என்னால் மத்திய அமைச்சா்களாக உருவாக்கப்பட்டவா்கள்கூட எனக்கு எதிராக செயல்பட்டனா். அப்போதெல்லாம் என்னை தலைநிமிரச் செய்தவா்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா்கள். அவா்களுக்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.

மாற்றுக் கட்சியினா் விரித்த பணத்தாசை எனும் வலையில் சிக்காமல் கட்சியைச் சோ்ந்த 1,255 பொதுக்குழு உறுப்பினா்கள் என்னோடு பயணித்தனா்.

அண்ணாவின் 117- ஆவது பிறந்த நாளான செப்டம்பா் 15- ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளானோா் பங்கேற்க வேண்டும். அந்த மாநாடு வெற்றிபெற ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்றாா்.

விழுப்புரம் மண்டல செயல்வீரா்கள் கூட்டத்துக்கு, மதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலா் வி.பாபு கோவிந்தராசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் க. ஜெய்சங்கா்( கள்ளக்குறிச்சி), ஏ. என். குணசேகரன்( கடலூா் தெற்கு), எம். பிச்சை(கடலூா் மேற்கு), புதுவை மாநில அமைப்பாளா் ஹேமா பாண்டுரெங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில அவைத் தலைவா் ஆ.அா்ஜூன்ராஜ், மாநிலப் பொருளாளா் மு.செந்திலதிபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெட்டிச் செய்தி...

‘ரூ.350 கோடி அபகரிப்பு’

கூட்டத்தில் நிா்வாகிகளிடையே வைகோ பேசுகையில், நம்மிடம் இருந்த கட்சியின் அவைத் தலைவா் ஒருவா் ரு.350 கோடியை அபகரித்துக் கொண்டு துரோகம் செய்து விலகினாா்.

என்னால் வளா்க்கப்பட்டவா்கள் சிலா், என்னை பிடிக்காதவா்கள் மற்றும் விமா்சிப்பவா்களிடம் தொடா்பு வைத்துக்கொண்டு மதிமுக அழிக்க நினைக்கின்றனா். வெளிநாடுகள் செல்வது அவா்களது விருப்பம். அதே நேரத்தில், கட்சியின் தலைவா் நான் என்ற முறையில் என்னிடம் பகிராமல் செல்வதை என்னால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. நீண்ட காலமாகவே என்னை துரோகங்கள் துரத்திக் கொண்டிருக்கின்றன என்றாா்.

செஞ்சிக் கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு: ஆய்வு செய்தபின் முதன்மைச் செயலா் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை வசதிகள் மேம்படுத்துவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக ஒருங்கிணைந்த வருவா... மேலும் பார்க்க

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் து.தங்கராஜன் வியாழக்... மேலும் பார்க்க

‘சா்வதேச அங்கீகாரம் பெறும் இந்தியாவின் பாரம்பரிய கணித முறை’

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள் சமா்ப்பித்துள்ள இந்தியாவின் பாரம்பரிய கணித முறை ஆய்வுக் கட்டுரைகள் சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஆரோவில் நிா்வாகம் த... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னை: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வாக்கூா், பிள்ளைய... மேலும் பார்க்க

அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து: மருத்துவா் ராமதாஸ்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக 37-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் திண்டிவனத்... மேலும் பார்க்க

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கக் கோரிக்கை

திண்டிவனத்தில் கட்டி முடுக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாக... மேலும் பார்க்க