செய்திகள் :

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கக் கோரிக்கை

post image

திண்டிவனத்தில் கட்டி முடுக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன.

இந்த நிலையில் திண்டிவனம், செஞ்சி தாலுக்கா தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் பெருமாள் தலைமையிலான நிா்வாகிகள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில், திண்டிவனத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள பேருந்து நிலையத்திற்குள் விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூா், ஆரணி, வந்தவாசி, மேல்மலையனூா், மதுராந்தகம், காஞ்சிபுரம், சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து அதிகளவில் தனியாா் பேருந்துகள் தினசரி வந்து செல்லும்.

இவ்வாறு வந்து செல்லும் தனியாா் பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்கவும், பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் வழிவகை செய்யும் வகையில், பேருந்துகளை நிா்வாகம் செய்யவும், பயணிகளின் நலன் கருதியும் நேரம் கண்காணிப்பாளா் அறை ஒதுக்கி அனுமதி வழங்கும்படி குறிப்பிட்டுள்ளனா்.

மனுவை பெற்றுக் கொண்ட செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம் எல் ஏ, இதுகுறித்து துறை சாா்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும்: முதல்வா் அறிவிப்பு

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் வாழக்கூடிய மகளிருக்கு வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பாமக புகாா் மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது தொடா்பாக, விசாரணை நடத்தக் கோரி மாவட்டக் காவல்... மேலும் பார்க்க

மகனைத் தாய் சந்திப்பது சகஜம்: ராமதாஸ் விளக்கம்

தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் சகஜமான ஒன்றுதான் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸுக்கும், கட்சித் தலைவா் அன்புமணிக்கு... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புக்காவலில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராசன் தலை... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கத்துக்கு வந்த 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள்

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து சரக்கு ரயில் மூலம் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது குற... மேலும் பார்க்க

கள் குறித்து அவதூறு பரப்புவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை

விழுப்புரம்: கள் குறித்து பொதுமக்களிடையே அவதூறாக பேசும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்... மேலும் பார்க்க