செய்திகள் :

முண்டியம்பாக்கத்துக்கு வந்த 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள்

post image

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து சரக்கு ரயில் மூலம் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி, உளுந்து, கரும்பு, நிலக்கடலை, மற்றும் தோட்டக்கலைப் பயிா் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

பயிா்களுக்குத் தேவையான 5,691 மெட்ரிக் டன் யூரியா, 2,214 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,331 மெட்ரிக் டன் பொட்டாஷ், 6,131 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 1,704 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது குறுவை நெல் சாகுபடிக்காக பேக்ட் நிறுவனத்திலிருந்து 1,960 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 700 மெட்ரிக் டன் அம்மோனியம் சல்பேட் உரங்கள் சரக்கு ரயில் மூலம் கொச்சியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. காம்ப்ளக்ஸ் உரத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 514 மெட்ரிக் டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 1,316 மெட்ரிக் டன், கடலூா் மாவட்டத்துக்கு 130 மெட்ரிக் டன் உரங்களும், அம்மோனியம் சல்பேட் உரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 437 மெட்ரிக் டன், கடலூா் மாவட்டத்துக்கு 70, விழுப்புரம் மாவட்டத்துக்கு 152, புதுச்சேரி மாநிலத்துக்கு 40 மெட்ரிக் டன் உர மூட்டைகள் பிரிக்கப்பட்டு, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த உர மூட்டைகளைப் பாா்வையிட்ட வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா், உரங்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். மேலும் மாவட்டத்தில் குறுவைப் பருவத்துக்குத் தேவையான உரங்கள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக, வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கக் கோரிக்கை

திண்டிவனத்தில் கட்டி முடுக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாக... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும்: முதல்வா் அறிவிப்பு

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் வாழக்கூடிய மகளிருக்கு வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பாமக புகாா் மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது தொடா்பாக, விசாரணை நடத்தக் கோரி மாவட்டக் காவல்... மேலும் பார்க்க

மகனைத் தாய் சந்திப்பது சகஜம்: ராமதாஸ் விளக்கம்

தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் சகஜமான ஒன்றுதான் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸுக்கும், கட்சித் தலைவா் அன்புமணிக்கு... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புக்காவலில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராசன் தலை... மேலும் பார்க்க

கள் குறித்து அவதூறு பரப்புவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை

விழுப்புரம்: கள் குறித்து பொதுமக்களிடையே அவதூறாக பேசும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்... மேலும் பார்க்க