செய்திகள் :

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு!

post image

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு நடத்திருப்பதாகத் தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம் 2023-2024 ஆம் நிதியாண்டில், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 530 கோடி(இந்திய மதிப்பில் ரூ.180 கோடி) வரை முறைகேடு நடைபெற்றிருப்பதாகத் தணிக்கை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணிக்கான ஸ்பான்ஸர்ஷிப்பில் இந்த முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோஷின் நக்வி, மத்திய உள்துறை அமைச்சராகவும் உள்ளார். அவரின் தலைமைப் பதவிக்கு இந்த முறைகேடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் உணவுக்காக மட்டும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் சுமார் 6.3 கோடி செலவிடப்பட்டிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சர்வதேச அணிகளின் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பு, அது கிரிக்கெட் வாரியத்தின் நிதிகளில் வராது என்றும் தணிக்கை குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், ஜூனியர் அணிக்கு சரியான தகுதிகூட இல்லாத மூன்று பயிற்சியாளர்களை நியமித்திருந்ததையும் தணிக்கைக் குழு கண்டறிந்துள்ளது. சட்டத்தின் படி, கிரிக்கெட் வாரிய நிதியை செலவளிக்க தலைவருக்கு முழு உரிமை உள்ளது என்ற கருத்தையும் தணிக்கைக் குழு நிராகரித்துள்ளது.

Audit finds $21M financial irregularities in Pakistan Cricket Board

இதையும் படிக்க :தடியடி.. கண்ணீர் புகை குண்டு வீச்சு..! மாணவி தற்கொலையால் பரபரக்கும் போராட்டக்களம்!

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொ... மேலும் பார்க்க

லார்ட்ஸ் டெஸ்ட்டில் வென்றும் 3-வது இடத்துக்கு சரிந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றும் இங்கிலாந்து அணி 3-வது இடத்துக்கு சரிந்துள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் ... மேலும் பார்க்க

பிங்க் பந்து நிபுணர் மிட்செல் ஸ்டார்க்! இமாலய சாதனை!

பிங்க் பந்து போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் இமாலய இலக்கை அடைந்துள்ளார். பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பகலிரவு ஆட்டத... மேலும் பார்க்க

வேலைச் சுமையா? ஸ்டோக்ஸ் முன்மாதிரி, ஏமாற்றும் பும்ரா..! விமர்சித்த முன்னாள் வீரர்!

லண்டனில் நடைபெற்ற டெஸ்ட்டில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்திலும் பந்துவீச, பும்ரா ஏன் வேலைச் சுமை என பல போட்டிகளில் இருந்து ஒதுங்குகிறார் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார். இந்தியா - இங... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த லியாம் டாசன்!

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் விளையாட லியாம் டாசன் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்து அணியில் கடந்த 2016-இல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானவர் லியாம் டாசன். தற்போது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும... மேலும் பார்க்க

கடந்த 100 ஆண்டுகளின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தும் அதிர்ஷ்டமில்லாத போலண்ட்!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் இந்த நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் 3-ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்... மேலும் பார்க்க