செய்திகள் :

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

post image

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார்.

நிமிஷா பிரியா தரப்பில் வாதாடும் வழக்குரைஞர் சுபாஷ் சந்திரன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் சொல்லியிருப்பதாவது: “கொல்லப்பட்ட நபரின் சகோதரர் தெரிவித்திருக்கும் விஷயங்களையெல்லாம் நாங்கள் பின்னடைவாகக் கருதவில்லை. இவையனைத்தும், இந்த செயல்முறையில் நடைபெறும் விஷயங்கள்தான். கொல்லப்பட்ட நபரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நாங்கள் சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறோம்.

செவ்வாய்க்கிழமை(ஜூலை 16) நிமிஷாவின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நல்ல மனிதர்கள் பலரும் அவரைக் காப்பாற்ற முன்வந்துள்ளனர். அதற்காகச் செயல்பட்டும் வருகின்றனர்.

நிமிஷாவைக் காப்பாற்ற ‘சர்வதேச செயல் குழுவில்’ முக்கியமாக உயர்நிலையில் 19 உறுப்பினர்களும் பல்வேறு துறைசார் 300 உறுப்பினர்களும் உள்ளனர். மேலும், இவ்விவகாரத்தில் காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் மட்டுமில்லாது, செல்வாக்குமிக்க தொழிலதிபர்களான எம். ஏ. யூசுஃப் அலி(லூலூ குழுமத் தலைவர்), போபி செம்மனூர் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து காப்பாற்ற முன்வந்துள்ளனர்” என்றார்.

there are a good lot of people working to spare the Kerala nurse from death row

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சாதனைக்குப் பாராட்டு: மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம்!

புது தில்லி: இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியதை வரவேற்று மத்திய அமைச்சரவை புதன்கிழமை(ஜூலை 16) தீர்மானம் நிறைவேற்றி... மேலும் பார்க்க