செய்திகள் :

போலி பேஸ்புக் கணக்குகள்; பெண்ணுக்கு பகிரப்பட்ட ஆபாச புகைப்படங்கள் - ஈரோடு இளைஞர் சிக்கிய பின்னணி!

post image

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் மாட்டுப் பண்ணை உரிமையாளர் ஒருவர், கடந்த மே மாதம் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், பேஸ்புக்கில் தனது மனைவியிடம் ஒரு நபர் ஆபாசமாக புகைப்படம் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி வருவதாகவும், அந்தப் புகைப்படங்களை தனக்கு பகிர்ந்து வருவதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸார், அந்த பேஸ்புக் முகவரியைக் கொண்டு பேஸ்புக் நிறுவனத்திடம் தகவல் கேட்டிருந்தனர். இந்நிலையில்,பேஸ்புக் நிறுவனத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், ஈரோட்டில் சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நந்தகுமார் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

கைது
கைது

அதில், ஏற்கெனவே மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்த நந்தகுமார், அதன் உரிமையாளரின் மனைவியின் பெயரைத் தெரிந்துகொண்டுள்ளார். பின்னர், போலி பேஸ்புக் கணக்கு மூலம் அவரது மனைவிக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, நந்தகுமாரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பிளஸ்1 வரை படித்துள்ள நந்தகுமார் வெவ்வேறு பெயர்களில் 10-க்கும் மேற்பட்ட போலி பேஸ்புக் கணக்குகளை தொடங்கி வைத்துள்ளார். அதன் மூலம் பெண்களுக்கு பேஸ்புக் மெசன்ஜர் மூலம் ஆபாசமாக புகைப்படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில், ஆன்லைன் வீடியோ கால் ஆப்களை பதிவிறக்கம் செய்துவைத்து அதன் மூலமும் பெண்களிடம் பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நந்தகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

திருத்தங்கல்: மது போதையில் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள்; தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்கள், மதிய உணவு இடைவேளைக்குப் பின் மது அருந்திவிட்... மேலும் பார்க்க

நீலகிரி பழங்குடி சிறுமி பாலியல் வன்கொடுமை: 'கடைசி மூச்சு வரை சிறைத் தண்டனை' - நீதிமன்றம் தீர்ப்பு

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி ஒருவர், நீலகிரியில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் தங்கி கல்வி பயின்று வந்திருக்கிறார்.கடந்த 2020-ம் பொங்கல் விடுமுறைக்க... மேலும் பார்க்க

`நகையை மீட்டு, மறு அடகு' - வங்கி ஊழியரிடம் ரூ.40 லட்சம் வழிப்பறி.. சினிமாவை மிஞ்சிய கிரைம் சம்பவம்

கேரள மாநிலம் கோழிக்கோடு பந்தீரங்காவு குன்னத்து பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபின் லால். இவரது மனைவி கிருஷ்ண லேகா. கடந்த மாதம் 11-ம் தேதி பந்தீரங்காவில் உள்ள ஒரு தனியார் வங்கிக்குச் சென்ற ஷிபின்லால், 'ஒ... மேலும் பார்க்க

நீலகிரி: சிறுத்தைகளைக் காவு வாங்கும் சுருக்கு கம்பிகள்; என்ன செய்யப்போகிறது வனத்துறை?

வனங்கள் நிறைந்த நீலகிரியில் வனத்திற்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.அண்டை மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளைப்‌ போல் ஊடுருவி வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் வேட்... மேலும் பார்க்க

Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' - மதத் தலைவர் சொன்ன விதிகள்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா(34) என்பவர் தனது பார்ட்னரை கொலைச் செய்த வழக்கில் ஏமன் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. 2008-ல் ஏமன் ந... மேலும் பார்க்க

மாணவியை பாலியல் வதை செய்த பேராசிரியர்கள்; 3 பேர் கைது... கல்வி நிலையங்களில் தொடரும் அவலங்கள்!

கர்நாடகா மாநிலம், பெங்களூரூவில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் அவர்களின் நண்பரால், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.பாதிக்கப்பட்ட மாண... மேலும் பார்க்க