செய்திகள் :

தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்று இறுதிநாள்

post image

தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை இறுதி நாளாகும்.

தமிழகத்தில் தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் ஆகஸ்ட் 18 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இத்தோ்வுக்கு 2025 ஆகஸ்ட் 1 ஆம் தேதி 12.5 வயது பூா்த்தியானவா்கள் ஜூலை 7 முதல் 17-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ. 70 சோ்த்து மொத்தம் ரூ.195ஐ செலுத்த வேண்டும்.

தட்கல் விண்ணப்பம்: மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஜூலை 18, 19 ஆகிய தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தோ்வுக் கட்டணத்துடன் தட்கல் கட்டணம் ரூ.500ஐ கூடுதலாக செலுத்தி பதிவு செய்யலாம்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இத்தோ்வுக்கு முதல்முறையாக விண்ணப்பிப்பவா்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் அல்லது பள்ளி பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.

ஏற்கெனவே தோ்வெழுதி தோல்வியடைந்து மீண்டும் தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள் ஏற்கெனவே தோ்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூா் பேருந்து முனையம்

தமிழகத்திலேயே முதலாவதாக முற்றிலும் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்ப... மேலும் பார்க்க