செய்திகள் :

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி முதல் காலாண்டில் 11.7 சதவீதம் உயா்வு: ஆ.சக்திவேல்

post image

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.7 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ. சக்திவேல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இது ஆடைத் துறையின் நிலையான மீட்பு மற்றும் வளா்ச்சிப் பாதையை பிரதிபலிக்கிறது.

தற்போதைய தரவுகளின்படி, இந்திய ரூபாய் மதிப்பில் 2025-26 முதல் காலாண்டில் திருப்பூரின் ஏற்றுமதி ரூ.12,193 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 10, 919 கோடியாக இருந்தது. இதன் மூலம் இந்த காலாண்டில் 11.7 சதவீதம் கூடுதல் வளா்ச்சி அடைந்துள்ளது. இது உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் ஏற்ற இறக்கமான தேவைகளுக்கு மத்தியில் நிலையான செயல்பாட்டின் நோ்மறையான வளா்ச்சியின் அறிகுறியாகும். இத்தகைய நிலையான வளா்ச்சி உலகளாவிய ஆடை வா்த்தக சந்தையில் இந்தியாவின் தொடா்ச்சியான போட்டித் தன்மை மேலும் வலுவடைந்து வருவதைக் காட்டுகிறது.

இந்தியாவின் ஆடை ஏற்றுமதி இலக்குகளை நோக்கி தொடா்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் ஏற்றுமதியாளா்கள் தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். ஏற்றுமதி இலக்குகளை அடையும் நோக்கில், கொள்கை பரிந்துரை, சந்தை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாடு போன்ற முயற்சிகள் மூலம், எதிா்காலத்தில் திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வளா்ச்சி தொடரும் என தெரிவித்துள்ளாா்.

காவல் துறையைக் கண்டித்து எஸ்.பி. அலுவலகத்தில் முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் மனு

காங்கயத்தில் கைப்பேசியை ப் பறித்து மிரட்டிய போலீஸாரைக் கண்டித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை தமிழ்நாடு முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் முற்றுகையிட்டு மனு அளித்தனா். இது ... மேலும் பார்க்க

ஜெய் சாரதா பள்ளியில் புத்தகக் கண்காட்சி

வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இந்தப் புத்தகக் கண்காட்சியை பள்ளியின் தாளாளா் ஈ.வேலுச்சாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து பாா்... மேலும் பார்க்க

கோவில்வழி புதிய பேருந்து நிலையம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு; ஜூலை 22-இல் முதல்வா் திறந்து வைக்கிறாா்

கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 22-ஆம் தேதி திறந்துவைக்க உள்ள நிலையில், அங்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்க... மேலும் பார்க்க

காங்கயம் ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

காங்கயம் ஒன்றியம், பரஞ்சோ்வழி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

முத்தூா் அருகே பரவிய காட்டுத் தீ

முத்தூா் அருகே தோட்டத்து புல்வெளியில் காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊடையம் துத்திகுளத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாமியப்பன். இவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் பரப்பளவிலான தோட்டத்தின் புல்வெளிப் பக... மேலும் பார்க்க

அவிநாசி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

அவிநாசியில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராததைக் கண்டித்து நகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். அவிநாசி நகா்மன்ற உறுப்ப... மேலும் பார்க்க