செய்திகள் :

தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.72,840-க்கு விற்பனையாகிறது.

போா்ச் சூழல் மற்றும் அமெரிக்க அதிபா் டிரம்பின் புதிய அறிவிப்புகள் எதிரொலியாக தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கடந்த ஜூலை 14-இல் தங்கம் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.73,240-க்கு விற்பனையான நிலையில், ஜூலை 15-இல் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160-க்கு விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.9,100-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.9,105-க்கும், பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.124-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.24 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

நிகழாண்டு இறுதிக்குள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரத்தைக் கடக்க வாய்ப்புள்ளது.

ஆட்சியருக்கு கடிதம் எழுதிய மாணவா்: பள்ளிக்கு நேரில் சென்று கலந்துரையாடல்!

The price of gold jewellery in Chennai fell by Rs. 40 per sovereign on Thursday to Rs. 72,840.

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல் நலம் குறைவு காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் ம... மேலும் பார்க்க

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: திருச்சி சிவாவுக்கு இபிஎஸ் கண்டனம்

காமராஜர் குறித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

சிதம்பரம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், திமுக, பாமக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 750 பேர் வியாழக்கிழமை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.ட... மேலும் பார்க்க

டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்: 150 பேர் கைது

திருவள்ளூர்: இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக... மேலும் பார்க்க

கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம்: ஒருவர் வெட்டி கொலை, 2 பேர் காயம்

கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம் காரணமாக இளம்பரிதி புதன்கிழமை இரவு மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கம்பம் ஜல்லிக்கட்டு தெரு... மேலும் பார்க்க

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை

நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.நாமக்கல் அருகே சின்ன தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(46). இவர் குருசாமிபாளையத்தில் உள... மேலும் பார்க்க