செய்திகள் :

கனமழை எச்சரிக்கை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

post image

ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்ற வானிலை எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.

நடப்பாண்டு வியாழக்கிழமை (ஜூலை 3) பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய யாத்திரை, ஆகஸ்ட் 9 வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

முன்னதாக, ஜம்முவின் பகவதி நகா் முகாமில் இருந்து 1,115 பெண்கள், 31 குழந்தைகள், 16 திருநங்கைகள் உள்பட 5,892 பேருடன் முதலாவது யாத்ரிகா்கள் குழு புதன்கிழமை காஷ்மீா் அடிவார முகாம்களுக்கு புறப்பட்டது.

பஹல்காம், பால்டால் முகாம்களை வந்தடைந்த இவா்கள், வியாழக்கிழமை அதிகாலையில் அமா்நாத் கோயிலுக்கு பக்தி முழக்கங்களுடன் யாத்திரையை தொடங்கினா். அரசு உயரதிகாரிகள் மற்றும் உள்ளூா் மக்கள் அவா்களை வழியனுப்பிவைத்தனா்.

சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, அமா்நாத் யாத்திரைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜம்மு பகவதி நகா் முகாமில் இருந்து 786 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 4,074 போ் கொண்ட இரண்டாவது குழு, 168 வாகனங்களில் அடிவார முகாம்களுக்கு வியாழக்கிழமை புறப்பட்டது.

யாத்திரை நிறுத்தம்

இந்த நிலையில், கடந்த 36 மணி நேரமாக ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் ஜம்மு-காஷ்மீர், காஷ்மீரில் உள்ள யாத்திரை வழித்தடங்கள் உள்பட இரண்டு நாளுக்கு கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து வியாழக்கிழமை(ஜூலை 17) அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு வழித்தடங்களிலும் யாத்ரீகர்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பால்டால் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் யாத்திரிகர் உயிரிழந்தார், மூன்று பேர் காயமடைந்தார். இந்த சம்பவம் நடந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இரு வழித்தடங்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று காஷ்மீர் பிரிவு ஆணையர் விஜய் குமார் பிதுரி கூறினார்.

இருப்பினும், புதன்கிழமை இரவு பஞ்ச்தாமி முகாமில் தங்கியிருந்த யாத்திரிகர்கள்,மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் மலை மீட்புக் குழுவினர் பால்டாலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

பால்டால் மற்றும் பஹல்காம் அடிப்படை முகாம்களில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்குவதற்காக, அதிக அளவிலான ஆள்கள், இயந்திரங்களை கொண்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அநேகமாக, வானிலை சூழலை பொறுத்து நாளை (வெள்ளிக்கிழமை) யாத்திரை மீண்டும் தொடங்கலாம் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஜம்முவிலிருந்து யாத்திரை நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை.

ஜூலை 3 ஆம் தேதி யாத்திரை தொடங்கியதிலிருந்து 3,800 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலுக்குச் சென்று இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை இதுவரை 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் தரிசித்துள்ளனர். இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யாத்திரைக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இந்தாண்டுக்கான 38 நாள் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

The Amarnath Yatra was suspended from here on Thursday following a weather advisory warning of heavy rain in many parts of Jammu and Kashmir, officials said.

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

சிதம்பரம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், திமுக, பாமக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 750 பேர் வியாழக்கிழமை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.ட... மேலும் பார்க்க

டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்: 150 பேர் கைது

திருவள்ளூர்: இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக... மேலும் பார்க்க

கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம்: ஒருவர் வெட்டி கொலை, 2 பேர் காயம்

கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம் காரணமாக இளம்பரிதி புதன்கிழமை இரவு மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கம்பம் ஜல்லிக்கட்டு தெரு... மேலும் பார்க்க

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை

நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.நாமக்கல் அருகே சின்ன தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(46). இவர் குருசாமிபாளையத்தில் உள... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: தனிப்படை விசாரணை

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்திலுள்ள வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது குறித்து தனிப்படை ப... மேலும் பார்க்க

தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.72,840-க்கு விற்பனையாகிறது.போா்ச் சூழல் மற்றும் அமெரிக்க அதிபா் டிரம்பின் புதிய அறிவிப்புகள் எதிரொலியாக தங்கம் விலை தொடா்ந்து... மேலும் பார்க்க