செய்திகள் :

15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!

post image

டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் மாடல் எலக்ட்ரிக் கார்களுக்கு 15 ஆண்டுகால பேட்டரி வாரண்டி வழங்கியுள்ளது.

முன்னதாக டாடா ஹாரியர் எலக்ட்ரிக் மாடல் காருக்கு இந்த சலுகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரு மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் எலக்ட்ரிக் மாடல் கார் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டாடா எலக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 8 ஆண்டுகள் அல்லது ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் பயணத்துக்கு பேட்டரி வாரண்டி வழங்கப்பட்டு வந்தது.

தற்போது வாகனம் பதிவு செய்யப்பட்டதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு எவ்வளவு கிலோ மீட்டர் ஓட்டினாலும் பேட்டரிக்கு வாரண்டி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிகத்துக்கு பயன்படுத்தினாலோ, டாடாவின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டாலோ இந்த சலுகை ரத்து செய்யப்படும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டாடா நிறுவனத்தின் கார்களை ஏற்கெனவே பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் எலக்ட்ரிக் கார்களை வாங்கினால் கூடுதலாக ரூ. 50,000 தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்சான் 45 இவி காரின் ஆரம்ப விலை ரூ. 13.99 லட்சம், கர்வ் இவி ஆரம்ப விலை ரூ. 17.49 லட்சம் ஆகும்.

Tata Nexon 45 and Curve model electric cars are offered with a 15-year battery warranty.

இதையும் படிக்க : மீண்டும் விற்பனைக்கு வரும் கைனடிக் ஹோண்டா டிஎக்ஸ்! இந்த முறை எலக்ட்ரிக்...

மீண்டும் விற்பனைக்கு வரும் கைனடிக் ஹோண்டா டிஎக்ஸ்! இந்த முறை எலக்ட்ரிக்...

ஹோண்டாவின் கைனடிக் கிரீன் நிறுவனம் டிஎக்ஸ் இவி ஸ்கூட்டரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் வகைகளை வடிவமைப்பதற்காக ஹோண்டா நிறுவனத்தின் கைனடிக் கிரீன் சமீபத்தி... மேலும் பார்க்க

சரிவைக் கண்ட பயணிகள் வாகன விற்பனை

2025-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உள்நாட்டுப் பயணிகள் வாகன மொத்த விற்பனை 1.4 சதவீதம் சரி ந்துள்ளது. இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஜெனரிக் கண் மருந்தை அறிமுகப்படுத்திய லூபின்!

புதுதில்லி: கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஜெனரிக் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருந்து நிறுவனமான லூபின் இன்று தெரிவித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 18 காசுகள் சரிந்து ரூ.85.94 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 18 காசுகள் சரிந்து 85.94 ஆக நிறைவடைந்தது. இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற நிலையில் வெளிநாடுகளில் உள்ள முக்கிய நாணயங்களுக்கு நிகரான... மேலும் பார்க்க

நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 82,634.48 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: பலவீனமான உலகளாவிய சந்தை போக்கும், கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் மத்தியில் முதலீட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டதால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப... மேலும் பார்க்க

எச்சிஎல் முதல் காலாண்டு நிகர லாபம் 9.7% சரிவு!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.7 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதாக ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் இன்று 3 சதவிகிதம் சரிந்து முடி... மேலும் பார்க்க