செய்திகள் :

டி20 தொடரைக் கைப்பற்றி இலங்கையில் வரலாறு படைத்த வங்கதேசம்!

post image

இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.

வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், நேற்றுடன் டி20 தொடர் நிறைவடைந்தது.

கொழும்புவில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம், இலங்கை மண்ணில் முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது வங்கதேசம். இதற்கு முன்பாக, இலங்கை மண்ணில் வங்கதேசம் தொடரை வென்றதில்லை.

மூன்றாவது போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மெஹிதி ஹாசனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதினை லிட்டன் தாஸ் வென்றார்.

Bangladesh team has created history by winning the T20 series against Sri Lanka.

இதையும் படிக்க: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறாரா?

4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? பயிற்சியாளர் பதில்!

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பது குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு... மேலும் பார்க்க

உலகக் கோப்பை தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை: தீப்தி சர்மா

உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் த... மேலும் பார்க்க

கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறாரா?

கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம்: டாப் 10-இல் 5 ஆஸி. வீரர்கள்!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக டாப் 10இல் 5 ஆஸி. வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கிரிக்கெட் உலகில் அதிகமான உலகக் கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தி வருகிறது. கடந்த... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: 2 இளம் வீரர்கள் உள்பட 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3-0 என டெஸ்ட் தொடரை வென்றது. அடுத்தத... மேலும் பார்க்க