விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
உலகக் கோப்பை தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை: தீப்தி சர்மா
உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று (ஜூலை 16) தொடங்கியது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்த தீப்தி சர்மா, ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
அதிகம் யோசிக்கவில்லை
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை என தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை பொருத்தவரையில், ஒரு அணியாக இலங்கை மற்றும் இந்தியாவில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதனால், உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை. ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Deepti Sharma, one of the Indian team's all-rounders, has said that she has not thought much about the World Cup series.
இதையும் படிக்க: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறாரா?