செய்திகள் :

நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 82,634.48 புள்ளிகளுடன் நிறைவு!

post image

மும்பை: பலவீனமான உலகளாவிய சந்தை போக்கும், கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் மத்தியில் முதலீட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டதால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஓரளவு உயர்ந்து முடிந்தன.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உயர்ந்த நிலையில், இன்றைய மத்திய நேர வர்த்தகத்தில் அதிகபட்சமாக 82,784.75 புள்ளிகளும் அதே வேளையில் குறைந்தபட்சமாக 82,342.94 புள்ளிகளை எட்டியது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 63.57 புள்ளிகள் உயர்ந்து 82,634.48 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 16.25 புள்ளிகள் உயர்ந்து 25,212.05 ஆக நிலைபெற்றது.

துறைகளில் உலோக குறியீடு 0.6 சதவிகிதமும், மருந்து குறியீடு 0.3 சதவிகிதம் சரிந்தது. அதே நேரத்தில் ரியல் எஸ்டேட், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஐடி, பொதுத்துறை வங்கி மற்றும் மீடியா குறியீடுகள் 0.5 முதல் 1.8 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, டெக் மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் எடர்னல், சன் பார்மா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை சரிந்து முடிந்தன.

நிஃப்டி-யில் மஹிந்திரா & மஹிந்திரா, விப்ரோ, எஸ்பிஐ, நெஸ்லே இந்தியா மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை உயர்ந்த நிலையில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எடர்னல், சன் பார்மா, டாடா ஸ்டீல் மற்றும் சிப்லா ஆகிய பங்குகள் சரிந்தன. மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் நிஃப்டி-யில் இன்று சமமாக முடிவடைந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், ஜூன் காலாண்டில் - இபிஐடிடீஏ (EBITDA) 69% உயர்ந்ததால் நெட்வொர்க் 18 மீடியா பங்குகள் 12 சதவிகிதம் உயர்வு.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் பங்குகள் 3 சதவிகிதம் சரிவுடன் முடிந்த நிலையில் டிக்சன் டெக் பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்தது. காபி டே பங்குகள் 20 சதவிகிதம் உயர்வுடன் முடிந்த நிலையில் டோலி கன்னா பங்குகளை வாங்கியதால் 20 மைக்ரான்கள் நிறுவன பங்குகள் 15 சதவிகிதம் உயர்ந்தது.

ராம் இன்ஃபோ லிமிடெட் பங்குகள் 5 சதவிகிதமும், ஷில்பா மெடிகேர் பங்குகள் கிட்டத்தட்ட 5 சதவிகிதமும், காலாண்டு நிகர லாபம் 54 சதவிகிதம் உயர்ந்த பிறகு ஐடிசி ஹோட்டல் பங்குகள் 4.5% உயர்ந்தது.

ஷ்னீடர் எலக்ட்ரிக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், ஆர்பிஎல் பேங்க், நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட், அசாஹி இந்தியா, எம்ஆர்எஃப், குளோபல் ஹெல்த்கேர், பயோகான், எச்டிஎஃப்சி ஏஎம்சி, ஈஐடி பாரி, யுடிஐ ஏஎம்சி உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் எட்டியது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்தன.

ஐரோப்பிய சந்தைகள் கலவையான நிலையில் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.

இதையும் படிக்க: இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை 1,878 டாலராகச் சரிவு

Benchmark stock indices Sensex and Nifty closed marginally higher as investors stayed on the sidelines amid weak global market trends and tariff-related uncertainty.

அமெரிக்காவில் ஜெனரிக் கண் மருந்தை அறிமுகப்படுத்திய லூபின்!

புதுதில்லி: கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஜெனரிக் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருந்து நிறுவனமான லூபின் இன்று தெரிவித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 18 காசுகள் சரிந்து ரூ.85.94 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 18 காசுகள் சரிந்து 85.94 ஆக நிறைவடைந்தது. இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற நிலையில் வெளிநாடுகளில் உள்ள முக்கிய நாணயங்களுக்கு நிகரான... மேலும் பார்க்க

எச்சிஎல் முதல் காலாண்டு நிகர லாபம் 9.7% சரிவு!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.7 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதாக ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் இன்று 3 சதவிகிதம் சரிந்து முடி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.82 ஆக நிறைவு!

மும்பை: டாலரின் பலவீனம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவறால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.82 ஆக நிறைவடைந்தது.இருப்பினும், நடைபெற்று வரும் இந்தியா - ... மேலும் பார்க்க

மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 317.45 புள்ளிகளுடனும் நிஃப்டி 113.50 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: முதலீட்டாளர்கள் ஆட்டோ மற்றும் பார்மா பங்குகள் தொடர்ந்து வாங்கியதால் இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் நான்கு நாள் தொடர் சரிவை முறியடித்து, உயர்ந்தது முடிவடைந்தன. மேலும் சில்லறை பணவீக்கம் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சோதனை தயாரிப்பு நடக்கும் என்றும், அதன் பிறகு அடுத்த மாதம் மொத்த தயாரிப்பு த... மேலும் பார்க்க