செய்திகள் :

மராத்திக்கு எதிரான பேசினாரா ராஜஸ்தான் இளைஞர்? அடித்து ஊர்வலமாகக் கூட்டிச் சென்ற ராஜ் தாக்கரே கட்சி

post image

மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியினர் மராத்திக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே வெளிமாநிலக் கடைக்காரர்கள் மராத்தி பேசவில்லை என்பதற்காக அவர்களை ராஜ் தாக்கரே கட்சியினர் அடித்த சம்பவங்கள் நடந்துள்ளன.

மன்னிப்பு கேட்கும் கடைக்காரர்
மன்னிப்பு கேட்கும் கடைக்காரர்

ராஜ் தாக்கரே கட்சியின் இச்செயலை எதிர்த்து மும்பையில் வெளிமாநில வியாபாரிகள் பந்த் நடத்தினர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்து இருந்தார். தற்போது ராஜ் தாக்கரே கட்சியினர் மீண்டும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவரை அடித்து உதைத்துள்ளனர்.

மும்பை விக்ரோலி தாக்குர் நகரைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு இருந்த பதிவில், ''ராஜஸ்தானியர்களின் சக்தியைப் பாருங்கள். மகாராஷ்டிராவில் மராத்தியர்களையே முந்திவிட்டோம். நாங்கள் மார்வாரிகள். எங்கள் முன்பு யாரும் நிற்க முடியாது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்பதிவு வைரலானதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் வாட்ஸ் ஆப் பதிவை வெளியிட்ட கடைக்காரின் கடைக்கு வந்தனர். அவர்கள் தொழிலதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதோடு மராத்தியர்களை அவமதித்ததாகக் கூறி அக்கடைக்காரரை அடித்தனர். வாட்ஸ் ஆப் பதிவுக்காக மன்னித்துவிடும்படி கூறும்படி கூறினர். உடனே கடைக்காரரரும் கேமராவைப் பார்த்து மன்னித்துவிடும்படி கூறினார்.

தொழிலதிபர் கையெடுத்து கும்பிட்டு, "இனி இது போன்று தவறு செய்யமாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கூறும் வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

அத்தொழிலதிபர் தனது இரண்டு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டு இனி இத்தவறைச் செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு விடாமல் அத்தொழிலதிபரை உள்ளூர் மார்க்கெட் வழியாக ஊர்வலமாக அழைத்துச்சென்று போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மீது முறைப்படி போலீஸில் புகாரும் செய்தனர்.

"இது போன்று இனி மராத்தியர்களுக்கு எதிராகச் செயல்பட்டால் இனி எங்களது நடவடிக்கை கடுமையானதாக இருக்கும்" என்று ராஜஸ்தானி கடைக்காரரிடம் எச்சரித்துவிட்டு சென்றனர்.

மராத்தியவர்களை அவமதிக்கும் கடைகளில் மராத்தியர்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர்களில் ஒருவரான விஷ்வஜித் தெரிவித்தார்.

கடந்த வாரம் மும்பை விரார் பகுதியில் வடமாநில ஆட்டோ டிரைவர் ஒருவர் மராத்தி பேசாத காரணத்திற்காக அவரை அடித்து உதைத்தனர். அதோடு அவரை மன்னிப்பு கேட்கும்படி நிர்ப்பந்தம் செய்தனர். இச்சம்பவங்களை நவநிர்மாண் சேனாவினர் வீடியோ எடுத்து அதில் மராத்தி பாடலைச் சேர்த்து, "மராத்தியர்களுக்கு எதிராகப் பேசினாலோ அல்லது எழுதினாலோ இது போன்றுதான் நடத்தப்படுவார்கள்" என்று எழுதி அந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

இங்கிலாந்து ஏலத்தில் விற்கப்பட்ட மகாத்மா காந்தியின் எண்ணெய் ஓவியம்; எத்தனை கோடிக்குத் தெரியுமா?

மகாத்மா காந்தி வரைவதற்கு அவர் அமர்ந்த ஒரே ஓவியம் இதுதான் என்று நம்பப்படுகிறது. இந்த அரிய எண்ணெய் ஓவியம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 175 கோடி ரூபாய்க்கு (சுமார் 17 மில்லியன் பவுண்டுகள்) விற்பனையாக... மேலும் பார்க்க

கைகொடுக்காத நீட்; 20 வயதில் Rolls Royce-ல் ரூ.72 லட்சம் சம்பளம்! - கிராமத்து மாணவி சாதித்தது எப்படி?

கர்நாடகா மாநிலம் தீர்த்தஹலி தாலுகாவில் கொடுருகிராமத்துப் பகுதியைச் சேர்ந்தவர் ரிதுபர்ணா. உயர்நிலைப் படிப்பு, PUC முடித்தவுடன் மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வை எழுதியிருக்கிறார். ஆனால், நீட் தேர்வின்... மேலும் பார்க்க

`கயிறுக்கு முன்னால் ஊசலாடும் உயிர்' - மன்னிப்பா? மரணமா? - நிமிஷா பிரியாவின் வழக்கில் நடந்தது என்ன?

``எப்படி துருதுருனு திரிஞ்சிட்டு இருந்த புள்ள அது தெரியுமா... ட்ராக்டர் ஓட்டும், வயலுக்கு போயி விவசாய வேலைக்கூட பார்க்கும். படிப்புலயும், எதிர்காலம் பத்தின சிந்தனையும் ரொம்ப அதிக கவனமா இருப்பா. எப்படி... மேலும் பார்க்க

உலக எமோஜி தினம் 2025: மக்களின் உணர்வுகளை எளிதில் சொல்லும் எமோஜிகள் - எப்போது தொடங்கியது தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் உலகில் எமோஜிகள் நம் அன்றாட பயன்படுத்தும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வாட்ஸ்அப் தொடங்கி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதளங்களிலும் இந்த எமோஜிகளை பயன்படுத்துகின்றோம். வார்த்தைக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பனியன், துண்டுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

மும்பையில் கடந்த வாரம் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் சட்டமன்ற உறுப்பினர் விடுதி கேண்டீனில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பருப்பு குழம்பு கெட்டுப்போய் இருந்தது.இதையடுத்து சஞ்சய்... மேலும் பார்க்க

3000 பீர்கேன்கள், மலம், சிறுநீர் பைகள்; வீடு வாடகைக்கு விட்ட தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (58) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களின் மகளுக்காக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்ட... மேலும் பார்க்க