செய்திகள் :

3000 பீர்கேன்கள், மலம், சிறுநீர் பைகள்; வீடு வாடகைக்கு விட்ட தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

post image

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (58) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களின் மகளுக்காக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்டை வாங்கியுள்ளனர்.

தற்காலிகமாக உதவி தேவைப்படும் ஒரு நண்பரை வாடகைக்கு அதில் வசித்து கொள்ள அனுமதித்துள்ளனர்.

வாரத்திற்கு £30 (இந்திய மதிப்பில் 3,453 ரூபாய்) வாடகை தருமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் அந்த குடியிருப்பாளர் இருந்துள்ளார்.

rep image

சமீபத்தில் அந்த வீட்டை சென்று தம்பதியினர் பார்த்தபோது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

வீடு முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட பீர் கேன்கள், சிறுநீர் நிரம்பிய பைகள், மலம் நிரம்பிய பைகள் என வீடே ஒரு குப்பை கிடங்காக மாறி இருப்பது கண்டு அவர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் கூற்றுப்படி" கடந்த ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. வீட்டை பராமரிக்காமல் ஒரு குப்பை கிடங்காக மாற்றி உள்ளார்.

அந்த வீட்டில் யாருமே வாழ முடியாத அளவிற்கு மோசமாக அசுத்தங்கள் நிரம்பி உள்ளன. நாங்கள் இந்த வீட்டை அவருக்கு தற்காலிகமாக வாழ அனுமதித்தோம், அதில் சிறிது காலம் தங்கி ஓவியம் வரைவதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னோம். நண்பர் என்ற முறையில் மட்டுமே இவ்வாறு குறைந்த வாடகையை சொன்னோம்.

ஆனால் அவர் இவ்வாறு வீட்டை அசுத்தம் ஆக்கியுள்ளார். கருணையின் அடிப்படையில் நாங்கள் அவரை இந்த வீட்டில் தங்க அனுமதித்தோம். ஒருநாளும் அவரை வாடகைக்காரராக நாங்கள் பார்க்கவில்லை, நண்பராக தான் பார்த்தோம். ஆனால் அவர் இவ்வாறு செய்துவிட்டார்” என்று தம்பதியினர் கூறுகின்றனர்.

மீண்டும் இந்த பிளாட்டை புனரமைக்க தம்பதியினர் சிரமப்பட்டு வருகின்றனர். அவரது மகள் நிதி உதவி திரட்டவும் சுத்தம் செய்யும் செலவுகளை ஈடுகட்டவும் GoFundme என்ற பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக எமோஜி தினம் 2025: மக்களின் உணர்வுகளை எளிதில் சொல்லும் எமோஜிகள் - எப்போது தொடங்கியது தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் உலகில் எமோஜிகள் நம் அன்றாட பயன்படுத்தும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வாட்ஸ்அப் தொடங்கி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதளங்களிலும் இந்த எமோஜிகளை பயன்படுத்துகின்றோம். வார்த்தைக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பனியன், துண்டுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

மும்பையில் கடந்த வாரம் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் சட்டமன்ற உறுப்பினர் விடுதி கேண்டீனில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பருப்பு குழம்பு கெட்டுப்போய் இருந்தது.இதையடுத்து சஞ்சய்... மேலும் பார்க்க

Zomato: ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், பும்ரா.. விளம்பரம் டிரெண்டிங் ஆனது ஏன்? - CEO சொன்ன காரணம்

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ தனது புதிய விளம்பரமான ஃப்யூவல் யுவர் ஹஸ்டல் (Fuel your Hustle) மூலம் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த விளம்பரத்தில் இந்தியாவின் முன்னணி பிரபலங்களான நடிகர்... மேலும் பார்க்க

கேரளா: 3 ஆண்டுகளுக்கு முன்பு காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல்; மீண்டும் உரிமையாளரிடமே வந்தது எப்படி?

கேரள மாநிலம் மலப்புரத்தின் மஞ்சேரிக்கு அருகிலுள்ள திரிக்கலங்கோடு பகுதியில் ஒரு ஆச்சரியச் சம்பவம் நடந்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ருக்மணி என்ற பெண்மணி தனது வீட்டின் முற்றத்தில் வேலை செய்து கொண்ட... மேலும் பார்க்க

Tesla : காரின் ஆரம்ப விலை ரூ.59.89 லட்சம்... மும்பையில் இந்தியாவின் முதல் டெஸ்லா கார் ஷோரூம்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்க திட்டமிட்டு இருந்தது. எப்போது கார் விற்பனை தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் டெஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஓடும் பேருந்தில் பிரசவம்; ஜன்னல் வழியாக குழந்தையை வீசிய பெற்றோர்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியில் இருந்து புனே நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ரிதிகா என்ற பெண் பயணம் செய்தார். அவருடன் அவரது கணவர் அல்தாப் ஷேக் என்பவரும் பயணம் செய்... மேலும் பார்க்க