செய்திகள் :

உலக எமோஜி தினம் 2025: மக்களின் உணர்வுகளை எளிதில் சொல்லும் எமோஜிகள் - எப்போது தொடங்கியது தெரியுமா?

post image

இன்றைய டிஜிட்டல் உலகில் எமோஜிகள் நம் அன்றாட பயன்படுத்தும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வாட்ஸ்அப் தொடங்கி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதளங்களிலும் இந்த எமோஜிகளை பயன்படுத்துகின்றோம். வார்த்தைகளை தாண்டி இந்த எமோஜிகள் உணர்வுகளை மிக எளிமையாக அடுத்தவர்களுக்கு புரிய வைக்கிறது.

இதனால் பலரும் எமோஜிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதி எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது.

எமோஜிபீடியாவின் நிறுவனர் ஜெர்மி பர்ஜ் என்பவரால் " உலக எமோஜி தினம்" நிறுவப்பட்டுள்ளது.

எமோஜிகள், வரைபடங்கள், லோகோகிராமங்கள், ஸ்மைலிகள் என்று அழைக்கப்படுகின்றன. 1999 ஆம் ஆண்டில் ஒரு ஜப்பானிய வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட எமோஜிகள் இன்று உலக அளவில் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.

2011 ஆண்டுக்குப் பிறகு எமோஜிகள் எல்லா இடங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டன.

எமோஜிகள் இன்று உலகளவில் மொழி தடைகளைத் தாண்டி உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளன.

சிரிக்கும் முகம் , இதயம் ❤️, அல்லது கைதட்டல் போன்ற எமோஜிகள், வார்த்தைகளை விட வேகமாக உணர்வுகளைப் பகிர உதவுகின்றன. இன்று, ஆயிரக்கணக்கான எமோஜிகள் கலாசார வேறுபாடுகள், பாலின அடையாளங்கள், மற்றும் பல்வேறு தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

எமோஜிகள் மூலம் மக்கள் தங்கள் மொழி அறிவு இல்லாதவர்களுடன் கூட எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியுடன், எமோஜிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எமோஜிகள் இன்று ஒரு உலகளாவிய மொழியாக மாறியுள்ளன. உங்களுக்கு பிடித்த எமோஜி எது? என்று கமெண்டில் சொல்லுங்கள்!

மகாராஷ்டிரா: பனியன், துண்டுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

மும்பையில் கடந்த வாரம் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் சட்டமன்ற உறுப்பினர் விடுதி கேண்டீனில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பருப்பு குழம்பு கெட்டுப்போய் இருந்தது.இதையடுத்து சஞ்சய்... மேலும் பார்க்க

3000 பீர்கேன்கள், மலம், சிறுநீர் பைகள்; வீடு வாடகைக்கு விட்ட தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (58) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களின் மகளுக்காக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்ட... மேலும் பார்க்க

Zomato: ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், பும்ரா.. விளம்பரம் டிரெண்டிங் ஆனது ஏன்? - CEO சொன்ன காரணம்

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ தனது புதிய விளம்பரமான ஃப்யூவல் யுவர் ஹஸ்டல் (Fuel your Hustle) மூலம் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த விளம்பரத்தில் இந்தியாவின் முன்னணி பிரபலங்களான நடிகர்... மேலும் பார்க்க

கேரளா: 3 ஆண்டுகளுக்கு முன்பு காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல்; மீண்டும் உரிமையாளரிடமே வந்தது எப்படி?

கேரள மாநிலம் மலப்புரத்தின் மஞ்சேரிக்கு அருகிலுள்ள திரிக்கலங்கோடு பகுதியில் ஒரு ஆச்சரியச் சம்பவம் நடந்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ருக்மணி என்ற பெண்மணி தனது வீட்டின் முற்றத்தில் வேலை செய்து கொண்ட... மேலும் பார்க்க

Tesla : காரின் ஆரம்ப விலை ரூ.59.89 லட்சம்... மும்பையில் இந்தியாவின் முதல் டெஸ்லா கார் ஷோரூம்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்க திட்டமிட்டு இருந்தது. எப்போது கார் விற்பனை தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் டெஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஓடும் பேருந்தில் பிரசவம்; ஜன்னல் வழியாக குழந்தையை வீசிய பெற்றோர்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியில் இருந்து புனே நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ரிதிகா என்ற பெண் பயணம் செய்தார். அவருடன் அவரது கணவர் அல்தாப் ஷேக் என்பவரும் பயணம் செய்... மேலும் பார்க்க