செய்திகள் :

மகாராஷ்டிரா: ஓடும் பேருந்தில் பிரசவம்; ஜன்னல் வழியாக குழந்தையை வீசிய பெற்றோர்; என்ன நடந்தது?

post image

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியில் இருந்து புனே நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ரிதிகா என்ற பெண் பயணம் செய்தார். அவருடன் அவரது கணவர் அல்தாப் ஷேக் என்பவரும் பயணம் செய்தார்.

இதில் ரிதிகா கர்ப்பமாக இருந்தார். அவர்கள் சிலீப்பர் சீட்டில் பயணம் செய்தபோது நள்ளிரவில் திடீரென ரிதிகாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சிறிது நேரத்தில் அவருக்கு பேருந்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர்கள் துணி ஒன்றில் சுற்றி பேருந்து ஜன்னல் வழியாக குழந்தையை வெளியில் தூக்கிப் போட்டுவிட்டனர்.

இதனைக் கவனித்த பேருந்து ஓட்டுநர் எதை வெளியில் போடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அல்தாப் தனது மனைவி வாந்தி எடுத்துவிட்டதால் அந்தத் துணியை வெளியில் போட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் ரிதிகாவின் படுக்கைக்கு அருகில் பயணம் செய்த மற்றொரு பயணி கொடுத்த புகாரின் பேரில் பேருந்தை நிறுத்தி எதை வெளியில் வீசினர் என்று பார்த்தபோது துணியில் குழந்தை ஒன்று இருந்தது.

வெளியில் வீசப்பட்டதில் குழந்தை இறந்திருந்தது. உடனே ஓட்டுநர் போலீஸ் கண்ட்ரோல் அறைக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் பேருந்தை விரட்டி வந்து ரிதிகாவையும், அவரது கணவரையும் பிடித்துச்சென்றனர். ரிதிகாவிடம் விசாரித்தபோது தனது கணவர்தான் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியில் போட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

இருவரும் கணவன், மனைவி என்று சொன்னார்கள். ஆனால் அதற்கு அவர்களிடம் எந்த வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. இருவரும் புனேயில் வசிப்பதாகவும், குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதி குழந்தையை வெளியில் போட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். போலீஸார் குழந்தை பெற்ற பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

உலக எமோஜி தினம் 2025: மக்களின் உணர்வுகளை எளிதில் சொல்லும் எமோஜிகள் - எப்போது தொடங்கியது தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் உலகில் எமோஜிகள் நம் அன்றாட பயன்படுத்தும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வாட்ஸ்அப் தொடங்கி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதளங்களிலும் இந்த எமோஜிகளை பயன்படுத்துகின்றோம். வார்த்தைக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பனியன், துண்டுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

மும்பையில் கடந்த வாரம் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் சட்டமன்ற உறுப்பினர் விடுதி கேண்டீனில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பருப்பு குழம்பு கெட்டுப்போய் இருந்தது.இதையடுத்து சஞ்சய்... மேலும் பார்க்க

3000 பீர்கேன்கள், மலம், சிறுநீர் பைகள்; வீடு வாடகைக்கு விட்ட தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (58) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களின் மகளுக்காக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்ட... மேலும் பார்க்க

Zomato: ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், பும்ரா.. விளம்பரம் டிரெண்டிங் ஆனது ஏன்? - CEO சொன்ன காரணம்

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ தனது புதிய விளம்பரமான ஃப்யூவல் யுவர் ஹஸ்டல் (Fuel your Hustle) மூலம் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த விளம்பரத்தில் இந்தியாவின் முன்னணி பிரபலங்களான நடிகர்... மேலும் பார்க்க

கேரளா: 3 ஆண்டுகளுக்கு முன்பு காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல்; மீண்டும் உரிமையாளரிடமே வந்தது எப்படி?

கேரள மாநிலம் மலப்புரத்தின் மஞ்சேரிக்கு அருகிலுள்ள திரிக்கலங்கோடு பகுதியில் ஒரு ஆச்சரியச் சம்பவம் நடந்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ருக்மணி என்ற பெண்மணி தனது வீட்டின் முற்றத்தில் வேலை செய்து கொண்ட... மேலும் பார்க்க

Tesla : காரின் ஆரம்ப விலை ரூ.59.89 லட்சம்... மும்பையில் இந்தியாவின் முதல் டெஸ்லா கார் ஷோரூம்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்க திட்டமிட்டு இருந்தது. எப்போது கார் விற்பனை தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் டெஸ... மேலும் பார்க்க