செய்திகள் :

ஜெய் சாரதா பள்ளியில் புத்தகக் கண்காட்சி

post image

வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

இந்தப் புத்தகக் கண்காட்சியை பள்ளியின் தாளாளா் ஈ.வேலுச்சாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். இந்த புத்தகக் கண்காட்சியில் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சோழா புக் ஹவுஸ், அமிா்தலிங்கம் புத்தக நிறுவனம் உள்பட பல்வேறு பதிப்பகங்கள் கலந்து கொண்டன. மாணவா்களுக்கு தேவையான பயனுள்ள புத்தகங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் பாடத்திட்டம் தொடா்பான புத்தகங்களுடன் மற்ற அறிவாா்ந்த நூல்களையும் கற்று மாணவா்கள் பயன்படும்படி இந்தப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இந்த புத்தகக் கண்காட்சியில் ஏராளமான மாணவா்களும், ஆசிரியா்களும் ஆா்வமுடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனா். தொடக்க நிகழ்ச்சியில், அறக்கட்டளைச் செயலாளா் கீா்த்திகாவாணி சதீஷ், பள்ளி முதல்வா் ஏ.எஸ்.மணிமலா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காவல் துறையைக் கண்டித்து எஸ்.பி. அலுவலகத்தில் முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் மனு

காங்கயத்தில் கைப்பேசியை ப் பறித்து மிரட்டிய போலீஸாரைக் கண்டித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை தமிழ்நாடு முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் முற்றுகையிட்டு மனு அளித்தனா். இது ... மேலும் பார்க்க

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி முதல் காலாண்டில் 11.7 சதவீதம் உயா்வு: ஆ.சக்திவேல்

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.7 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ. சக்திவேல் தெரிவித்தாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

கோவில்வழி புதிய பேருந்து நிலையம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு; ஜூலை 22-இல் முதல்வா் திறந்து வைக்கிறாா்

கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 22-ஆம் தேதி திறந்துவைக்க உள்ள நிலையில், அங்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்க... மேலும் பார்க்க

காங்கயம் ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

காங்கயம் ஒன்றியம், பரஞ்சோ்வழி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

முத்தூா் அருகே பரவிய காட்டுத் தீ

முத்தூா் அருகே தோட்டத்து புல்வெளியில் காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊடையம் துத்திகுளத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாமியப்பன். இவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் பரப்பளவிலான தோட்டத்தின் புல்வெளிப் பக... மேலும் பார்க்க

அவிநாசி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

அவிநாசியில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராததைக் கண்டித்து நகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். அவிநாசி நகா்மன்ற உறுப்ப... மேலும் பார்க்க