செய்திகள் :

மது போதையில் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - கோவை மருமகன் கைது

post image

கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில் மகன் உள்ளார். அவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

கோவை

இதனால் மணிகண்டன் மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். மணிகண்டன் மகன் மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரின் 75 வயதான மாமியார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மணிகண்டன் திடீரென வீட்டு கதவை பூட்டியுள்ளார். தொடர்ந்து தன் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து மூதாட்டியை மீட்டுள்ளனர். இந்த தகவல் மணிகண்டனின் மகனுக்கு சொல்லப்பட்டது.

ஆத்திரமடைந்த அவர் உடனடியாக வீட்டுக்கு சென்று, பொதுமக்களுடன் இணைந்து மணிகண்டனை தாக்கியுள்ளார். இதில் மணிகண்டன் பலத்த காயம் அடைந்துள்ளார். இதுகுறித்து மணிகண்டனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கோவை அனைத்து (மத்திய) மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

கைது

அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். காயத்துக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணிகண்டணை காவல்துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb                                                                   

சென்னை: ஒரே வீட்டை 2 பேருக்கு லீசுக்குக் கொடுத்த உரிமையாளர்; ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் கைது

சென்னை, அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இணையதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்.அப்போது அயனாவரம், பாரதி நகரில் குடியிருக்கும் ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: அலைக்கழித்த காவல்துறை; சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை; என்ன நடக்கிறது?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து, நண்பகல் நேரத்தில் வீட்ட... மேலும் பார்க்க

``ரூ.50 லட்சம் வாங்கி விட்டு போதைப் பொருள் தரவில்லை..'' - 2 பேரை 10 நாள்கள் சித்ரவதை செய்த கும்பல்

மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சபீர் சித்திக் மற்றும் அவரது நண்பர் சாஜித் எலக்ட்ரிக்வாலா ஆகியோரிடம் போதைப்பொருளை சப்ளை செய்வதற்காக சர்வார் கானும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ.50 லட்சம... மேலும் பார்க்க

புத்த துறவிகளுடன் உறவு; 100 கோடி பணம் பறிப்பு - தாய்லாந்து பெண்ணிடம் 80,000 போட்டோ, வீடியோக்கள்

தாய்லாந்து காவல்துறை, `மிஸ் கோல்ஃப்' (Ms Golf) என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணை கைது செய்துள்ளது. இவர் புத்த மத துறவிகளை பாலியல் உறவுகளுக்கு ஈர்த்து, அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத... மேலும் பார்க்க

Kerala Nurse: ``பிளட் மணி வேண்டாம்; தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்..'' - ஏமன் குடும்பம் சொல்வதென்ன?

ஏமனில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காக கிராண்ட் முஃப்தி ஷேக் காந்தபுரம் ஏ.பி ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிமிஷா பிரியாபிளட் மணி! ஏமன் அடிப்படையில் ... மேலும் பார்க்க

ஜூனியர் மாணவனை கொடூரமாக கொலை செய்து எரித்த சீனியர்கள்; மதுரையில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே ஐ.டி.ஐ மாணவன் கல்லால் தாக்கி எரித்துக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 14 ஆம் தேதி மாலை இளமனூர் கண்மாய்கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் உடல... மேலும் பார்க்க