செய்திகள் :

புத்த துறவிகளுடன் உறவு; 100 கோடி பணம் பறிப்பு - தாய்லாந்து பெண்ணிடம் 80,000 போட்டோ, வீடியோக்கள்

post image

தாய்லாந்து காவல்துறை, `மிஸ் கோல்ஃப்' (Ms Golf) என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணை கைது செய்துள்ளது. இவர் புத்த மத துறவிகளை பாலியல் உறவுகளுக்கு ஈர்த்து, அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பெண் ஒன்பது துறவிகளிடம் சுமார் 385 மில்லியன் பாட் (11.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) (இந்திய ரூபாய் மதிப்பில் 100 கோடு) பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது, 80,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்து துறவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டவை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thai News Pix

வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாங்காக்கில் துறவிகள் மடத்தின் தலைவர் திடீரென துறவறத்தை விட்டு வெளியேறியதை அடுத்து இந்த விஷயம் காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

கோல்ஃப்(பெண்), கடந்த ஆண்டு அந்த துறவியுடன் உறவு வைத்து, பின்னர் அவரது குழந்தையை சுமப்பத்தாக கூறி 70 லட்சம் பாட்டுக்கு மேல் குழந்தை ஆதரவு தொகை கோரியதாக காவல்துறை தெரிவித்தது. மற்ற துறவிகளும் இதே முறையில் பணம் செலுத்தியது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

அப்பெண்னின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில், மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இவர் மீது மிரட்டி பணம் பறித்தல், பணமோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமில்லாமல் காவல்துறையினர், இப்படி தவறாக நடந்து கொள்ளும் துறவிகள் குறித்து புகாரளிக்க ஹாட்லைன் ( அவசர அல்லது முக்கியமான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தப்படும் தொலைபேசி சேவை) ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தாய்லாந்து புத்த மத அமைப்பை உலுக்கியுள்ளது. அதன் நிர்வாக அமைப்பு (சங்க சுப்ரீம் கவுன்சில்) துறவற விதிகளை மறு ஆய்வு செய்ய குழு அமைக்க உள்ளது. விதிகளை மீறும் துறவிகளுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மன்னரின் உத்தரவு

தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன் , ஜூன் 2024-ல் 81 துறவிகளுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். சமீபத்திய தவறான நடத்தைகள் "பௌத்தர்களின் மனதில் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதே போன்று 2017-ல், ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற விராபோல் சுக்போல் என்ற துறவி, பாலியல் குற்றங்கள், பணமோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வந்தன. 2022 ஆம் ஆண்டில் பெட்சபூன் மாகாணத்தில் ஒரு கோயிலில் இருந்த நான்கு துறவிகள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு துறவறத்திலிருந்து நீக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துற... மேலும் பார்க்க

நாமக்கல்: தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக் கொலை; சரக்கு லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு ப... மேலும் பார்க்க

மருத்துவமனையில் நுழைந்து நோயாளி சுட்டுக் கொலை; திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம்- பீகார் அதிர்ச்சி

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்... மேலும் பார்க்க

சென்னை: ஒரே வீட்டை 2 பேருக்கு லீசுக்குக் கொடுத்த உரிமையாளர்; ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் கைது

சென்னை, அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இணையதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்.அப்போது அயனாவரம், பாரதி நகரில் குடியிருக்கும் ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: அலைக்கழித்த காவல்துறை; சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை; என்ன நடக்கிறது?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து, நண்பகல் நேரத்தில் வீட்ட... மேலும் பார்க்க