செய்திகள் :

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

post image

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்துக்கே முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.

சமீபகாலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தட்கல் முன்பதிவுக்கு புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்தது.

அதன்படி, ஜூலை 1 முதல் ஆதார் எண் இணைக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல் ரயில்வே முன்பதிவு அலுவலகங்களிலும் ஆதார் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்பட்ட பின்னரே முன்பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது முன்பதிவில்லா பெட்டிகளில் அலைமோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.

90 முதல் 100 பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் உள்ள முன்பதிவுப் பெட்டிகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக தில்லி ரயில் நிலையத்தில் கூடிய பயணிகளிடையே கூட்டநெரிசல் ஏற்பட்டு 18 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்துக்கு, அளவுக்கு அதிகமான பயணிகளுக்கு முன்பதிவில்லா டிக்கெட் வழங்கியதே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், தொலைதூர ரயில்களில் ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு 150 டிக்கெட் மட்டுமே வழங்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. தற்போது முதல்கட்டமாக தில்லி ரயில் நிலையத்தில் ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் வீதம் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.

எடுத்துகாட்டாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு குறிப்பிட்ட நேரத்தில் 2 ரயில்கள் புறப்படும் பட்சத்தில், இரண்டு ரயில்களிலும் தலா 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் 1,200 முன்பதிவில்லா டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

இந்த நடைமுறை விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

There is a restriction on issuing tickets for travel in unreserved compartments on trains.

இதையும் படிக்க : மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு ஜாமினில் வெளிவராத பிரிவின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.துபையில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை கா்... மேலும் பார்க்க