செய்திகள் :

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

post image

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன, நம்பிக்கை, அயராத உழைப்பு இருந்தால் மிகப்பெரிய கனவுகளை எட்டலாம் என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார் ரிதுபர்னா.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நீட் தேர்வை எழுதி டாக்டராக நினைத்த ரிதுபர்னா, அதில் தோல்வியடைந்தபோது துவண்டுபோகவில்லை. பிறகு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக முடிவு செய்தார். ஆனால், அவரது தந்தையின் சொல்படி, பொறியியல் சேர்ந்து படித்தார்.

இன்று பிரிட்டனில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தில் இளம் வயதில் பணியில் சேர்ந்திருக்கும் பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.

கர்நாடகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டதோடு, விவசாயத் துறைக்குத் தேவையான ரோபோடிக் இயந்திரங்களை தயாரித்து சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்றார்.

படிக்கும்போதே, தன்னுடைய திறமையால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இன்டர்ஷிப் கிடைத்தது. தற்போது அது பணி வாய்ப்பாக மாறியிருக்கிறது.

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க

தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் பருவமழை த... மேலும் பார்க்க

தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்... மேலும் பார்க்க