செய்திகள் :

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

post image

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஆரம்பத்தில் இருந்தே பிகாரில் அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். தற்போது ஆகஸ்ட் 1, 2025 முதல், அதாவது ஜூலை மாதக் கட்டணத்தில் இருந்தே, அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட்கள் வரை மின்சாரம் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் 1.67 கோடி பிகார் குடும்பங்கள் பயனடைவார்கள்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வீடுகள் அல்லது அருகிலுள்ள பொது இடங்களில் சூரிய மின் வசதி நிறுவ முடிவெடுத்துள்ளோம்.

ஏழை குடும்பங்களின் வீடுகளில் சூரிய மின்சார வசதி அமைக்க முழு செலவையும் மாநில அரசு ஏற்கும், மீதமுள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் சூரிய மின்சார உற்பத்தி 10,000 மெகாவாட் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன்னதாக, அரசுத்துறை வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Bihar Chief Minister Nitish Kumar announced on Thursday that up to 125 units of electricity will be provided free of cost from August onwards.

இதையும் படிக்க : அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்... மேலும் பார்க்க

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க