செய்திகள் :

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

post image

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் கட்டுமானத்தில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்தது. அவரது தந்தை காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள பிதாம்பூர் நகரில் அமைந்துள்ள வீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக உள்ளூர் காவல் நிலைய அதிகாரி ஓம் பிரகாஷ் அஹிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கனமழையைத் தொடர்ந்து, கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள ஒரு சுவர் பலவீனமடைந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் இடிந்து விழுந்ததாகவும், பிறந்து இரண்டு மாதமேயான குழந்தை பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்திற்குப் பிறகு, குழந்தையும் அவரது தந்தையும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சாக்ஷி என அடையாளம் காணப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, அவரது தந்தை தஷ்ரத் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி கூறினார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

A two-month-old girl died and her father was injured when a wall of an under-construction house collapsed after heavy rains in Madhya Pradesh's Dhar district in the wee hours of Thursday, police said.

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் பருவமழை த... மேலும் பார்க்க

தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்... மேலும் பார்க்க

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க