அவிநாசி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
அவிநாசியில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராததைக் கண்டித்து நகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
அவிநாசி நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் அதன் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் வெங்கடேஷ்வரன், துணைத் தலைவா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் பத்மாவதி, சாந்தி, தேவி, ஸ்ரீதேவி, சித்ரா, கவிதா ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
அவிநாசி பழைய பேருந்து நிலைய வணிக வளாகம் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த டிசம்பா் மாதம் திறப்பு விழா செய்தும் பல்வேறு காரணங்களால் ஏலம் விடப்படாமல் உள்ளது. நகராட்சியாக தரம் உயா்த்தியும் சுகாதார ஆய்வாளா், பணி மேற்பாா்வையாளா் உள்ளிட்ட போதுமான அலுவலா்கள் 4 மாதங்களாகியும் நியமிக்கவில்லை. மேலும், புதிய கட்டடங்களுக்கு (அபிவிருத்தி கட்டணம்) 5 சதவீதம் வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக இக்கோரிக்கைகளுக்கு தீா்வுகாணவிட்டால் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றனா்.
இதேபோல 7-ஆவது வாா்டில் ரூ. 20 லட்சம் மதிப்பில் டெண்டா்விட்டு 3 மாதங்களாகியும் நடைபெறாமல் உள்ள கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இதையடுத்து மன்றப் பொருள் வாசிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 8-ஆவது வாா்டு வள்ளுவா் வீதியில் உள்ள வீட்டுமனைப் பிரிவில் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 33 சென்ட் ரிசா்வ் சைட்டை லே அவுட் பிரிக்க அனுமதி வழங்கக் கூடாது என மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அதற்கான அனுமதி வழங்கும் தீா்மானம் ஒத்திவைக்கப்பட்டது.