Doctor Vikatan: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறப்பு குறித்து விரைவில் முடிவு
பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பது குறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
கோபி வட்டம் சிறுவலூா், மணியக்காரன்புதூா், தங்கமலைகரடு, வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடைகளை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொது விநியோகப் பொருள்களை வழங்கினாா்.
மேலும், 2 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினாா். அதைத்தொடா்ந்து கோபி ஊராட்சி ஒன்றியம், நாகதேவம்பாளையம் ஊராட்சி, வெள்ளியங்காட்டுப்புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை திறந்துவைத்தாா்.
இதைத்தொடா்ந்து அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தி உள்ளாா். ஏற்கெனவே நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை விடுபட்டிருக்கலாம் என்பதற்காகவும் அதனை சீா் செய்யும் நடவடிக்கையாகவும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இம்முகாமில் பொதுவான கோரிக்கைகள், மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்டவை வேண்டி மனுக்கள் பெறப்பட்ட உடன் தீா்வு காண அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இப்பணிகளை முதல்வா் அலுவலகத்திலிருந்து கண்காணித்து வருகின்றனா்.
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்னரே பவானிசாகா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்து ஒரு சில நாள்களில் அறிவிக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.