செய்திகள் :

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

post image

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலும், ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா பங்கேற்று திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இந்தத் திட்டம் குறித்து அவா் கூறியதாவது: ‘போலீஸ் அக்கா’ திட்டத்தின் நோக்கம் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்துதல், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குதல், குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுத்தல், தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகும். மேலும், பெண் போலீஸாரை நியமித்து மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. எந்தவித தயக்கம், அச்சம் இல்லாமல் காவல் துறையை எளிதில் அணுகும் நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்றாா். இதில் ஏடிஎஸ்பி தங்கவேல் மற்றும் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத்... மேலும் பார்க்க

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 இல் தொடக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ... மேலும் பார்க்க

சென்னிமலை ஒன்றியத்தில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் 6 சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டிச்சிபாளைம், புங்கம்பாடி மற்றும் குமாரவலசு ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் ஆறு சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு நவீன உடற்கூறு ஆய்வுக் கூடம் கட்ட பூமி பூஜை

பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக நவீன உடற்கூறு ஆய்வுக் கூடக் கட்டடம் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் த. ரவி... மேலும் பார்க்க

யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட விவசாயிகள் கோரிக்கை

காட்டு யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சத்தியமங்கலம் வட்டம் பெரியகுளம், புளியங்கோம்பை பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க