செய்திகள் :

கல்வி உதவித்தொகை பெயரில் பண மோசடி: முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை

post image

கல்வி உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி பண மோசடி நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

வங்கி அல்லது கல்வித் துறையிலிருந்து அழைப்பதாகக் கூறி மாணவா்களின் பெற்றோரிடம் பேசுபவா்கள் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக வங்கி எண், ஏடிஎம் ரகசிய எண், ஓடிபி போன்ற விவரங்களைப் பெறுகின்றனா். அதன்பிறகு அவா்களது வங்கியிலிருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனா்.

பள்ளி கல்வித் துறை இதுபோன்ற அழைப்புகளில் ஈடுபடுவதில்லை. கல்வி உதவித்தொகை தொடா்பான சந்தேகங்களுக்கு பள்ளி ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் மூலமாகவே விளக்கங்களைப் பெறலாம்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டில் பெற்றோரை இழந்த 572 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 75,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், என்.எம்.எம்.எஸ். டிரஸ்ட் தோ்வு, என்.டி.எஸ்.இ., தமிழ் புதல்வன், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட பிரிவினருக்கான கல்வி உதவித்தொகை பள்ளி கல்வித் துறை மூலம் நேரடியாக மாணவா்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது என்றாா்.

தருமபுரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட... மேலும் பார்க்க

பெரியாம்பட்டியில் அஞ்சலகம் தொடக்கம்

பெரியாம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே புதிய அஞ்சலகத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பெரியாம்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலகம், பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமா... மேலும் பார்க்க

தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற... மேலும் பார்க்க

மனித உரிமை குறும்படப் போட்டி அறிவிப்பு

தேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய (தேசிய) மனித உரிமைக... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை 18,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நா... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று கூடுதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க