செய்திகள் :

பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று கூடுதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.காம்., பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் அரசின் ஒப்புதல் அளித்தபடி 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வானது வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் இதுவரை சோ்க்கை பெறாத விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவா்கள் கல்லூரிக்கு நேரில் வந்து சோ்க்கை பெறலாம்.

மேலும், பிஏ ஆங்கிலம் மற்றும் பிஎஸ்சி கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இவ்விரண்டு கலந்தாய்வின் போது இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை உள்ளிட்டவைகளின் நகல் 2 பிரதிகள், புகைப்படம் - 5 ஆகியவற்றினை கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட... மேலும் பார்க்க

பெரியாம்பட்டியில் அஞ்சலகம் தொடக்கம்

பெரியாம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே புதிய அஞ்சலகத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பெரியாம்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலகம், பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமா... மேலும் பார்க்க

தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற... மேலும் பார்க்க

மனித உரிமை குறும்படப் போட்டி அறிவிப்பு

தேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய (தேசிய) மனித உரிமைக... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெயரில் பண மோசடி: முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி பண மோசடி நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூற... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை 18,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நா... மேலும் பார்க்க