செய்திகள் :

அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவால் அதிர்ச்சி

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கடந்த மாதம் 27 ஆம் தேதி பதிவு செய்யப்படாத திருட்டுப் புகாரில் காவல்துறை தனிப்படையினரின் சட்டவிரோத விசாரணையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம்
அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம்

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட 5 காவலர் கைது செய்யப்பட்டனர். மானாமதுரை டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிவகங்கை எஸ்.பி இடமாறுதல் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

ஏற்கெனவே அஜித்குமாரை காவலர்கள் தாக்கி சித்திரவதை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது, அஜித்குமார் குடும்பத்தினரிடம் அப்பகுதி அரசியல் புள்ளிகளும், காவல்துறையினரும் சமரசம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரகசிய பேச்சுவார்த்தை

அஜித்குமார் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியில் தெரிந்த மறுநாள் (ஜூன் 28) உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

இந்த பதற்றமான சூழ்நிலையில் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி புள்ளியும், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரமும் (இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்) இன்னும் சிலருடன் சேர்ந்து அஜித்குமாரின் தாயார் மாலதி, தம்பி நவீன்குமார், சித்தி, தாய்மாமா ஆகியோரை அப்பகுதியிலுள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்து சமரசம் பேசியுள்ளார்கள்.

"உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்கிறோம், இதை பெரிதுப்படுத்த வேண்டாம், லட்சக்கணக்கில் பணம் தருகிறோம், போராட்டம் நடத்த வேண்டாம்" என்று, அன்பாக மிரட்டி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

திருமண மண்டபத்தை பூட்டிக்கொண்டு ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதை தெரிந்துகொண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜன்னல் வழியாக மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். அதில் அரசியல் புள்ளிகள், காவல்துறையினர் இருப்பது நன்றாகத் தெரிகிறது. அப்போது மப்டியில் உள்ள ஒரு காவலர், ஜன்னலை சாத்திவிட்டு செல்கிறார். அதனால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த மண்டபத்தின் கதவை திறக்க சொல்லி ஆவேசமாக கதவை தட்டியுள்ளனர்.

சிபிஐ அதிகாரிகள்

ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலரும், காவல்துறை அதிகாரிகளும் அஜித்குமார் குடும்பத்தினரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக ஏற்கெனவே தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமார் வழக்கில் தற்போது சிபிஐ விசாரணை தொடங்கியுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோவால் பஞ்சாயத்து செய்த ஆளும்கட்சி புள்ளிகள், அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்று சொல்லப்படுவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Kerala Nurse: ``பிளட் மணி வேண்டாம்; தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்..'' - ஏமன் குடும்பம் சொல்வதென்ன?

ஏமனில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காக கிராண்ட் முஃப்தி ஷேக் காந்தபுரம் ஏ.பி ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிமிஷா பிரியாபிளட் மணி! ஏமன் அடிப்படையில் ... மேலும் பார்க்க

ஜூனியர் மாணவனை கொடூரமாக கொலை செய்து எரித்த சீனியர்கள்; மதுரையில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே ஐ.டி.ஐ மாணவன் கல்லால் தாக்கி எரித்துக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 14 ஆம் தேதி மாலை இளமனூர் கண்மாய்கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் உடல... மேலும் பார்க்க

மது போதையில் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - கோவை மருமகன் கைது

கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில் மகன் உள்ளார். அவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கோவைஇதனால் மணிகண்டன் மது பழக்கத்த... மேலும் பார்க்க

`சரக்கு டிராக்டரில் ADGP சபரிமலை பயணம்' - கோர்ட் கண்டனம்; `டிரைவர் பலிகடா' - கேரளாவில் சர்ச்சை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு பம்பாவில் இருந்து பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம். நடக்க இயலாத பக்தர்கள் டோலி மூலம் பயணிப்பது வழக்கம். அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை தொழிலாளர்களுக்கு பக்தர்கள் வழங்க... மேலும் பார்க்க

போலி பேஸ்புக் கணக்குகள்; பெண்ணுக்கு பகிரப்பட்ட ஆபாச புகைப்படங்கள் - ஈரோடு இளைஞர் சிக்கிய பின்னணி!

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் மாட்டுப் பண்ணை உரிமையாளர் ஒருவர், கடந்த மே மாதம் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், பேஸ்புக்கில் தனது மனைவியிடம் ஒரு நபர் ஆபாசம... மேலும் பார்க்க

திருத்தங்கல்: மது போதையில் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள்; தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்கள், மதிய உணவு இடைவேளைக்குப் பின் மது அருந்திவிட்... மேலும் பார்க்க