செய்திகள் :

`சரக்கு டிராக்டரில் ADGP சபரிமலை பயணம்' - கோர்ட் கண்டனம்; `டிரைவர் பலிகடா' - கேரளாவில் சர்ச்சை

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு பம்பாவில் இருந்து பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம். நடக்க இயலாத பக்தர்கள் டோலி மூலம் பயணிப்பது வழக்கம். அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை தொழிலாளர்களுக்கு பக்தர்கள் வழங்க வேண்டும்.

சுவாமி ஐயப்பன் சாலை மார்கமாக பம்பாவில் இருந்து சன்னிதானத்துக்கு உணவு பொருள்கள் உள்ளிட்டவை கொண்டுசெல்லப்படுகிறது. அந்த டிராக்டர்களில் முன்பு பலரும் பயணம் செய்து வந்தனர்.

சபரிமலை

மலைப்பாதையில் டிராக்டரில் பயணிப்பது ஆபத்தானது என்பதால், சரக்கு கொண்டு செல்லும் டிராக்டர்களில் டிரைவர் மட்டுமே செல்ல வேண்டும் எனவும். டிரைவரைத் தவிர கூடுதலாக யாரும் டிராக்டரில் பயணிக்கக்கூடாது எனவும். மீறி டிராக்டரில் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 2021-ம் ஆண்டு கேரளா ஐகோர்ட்டின் தேவசம் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கிடையே டிராக்டரில் போலீஸ் ஏ.டி.ஜி.பி ஒருவர் சபரிமலை சன்னிதானத்துக்கு சென்றுவந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் நவகிரக சன்னதி பிரதிஷ்டைக்காக கடந்த 12-ம் தேதி மற்றும் 13-ம் தேதி நடை திறக்கப்பட்டு இருந்தது. 12-ம் தேதி மாலை ஏ.டி.ஜி.பி எம்.ஆர்.அஜித்குமார் பம்பா கணபதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சுவாமி ஐயப்பன் சாலை வழியாக சிறிது தூரம் நடந்து சென்றதாகவும். கேமராக்கள் உள்ள பகுதியை தாண்டியதும் சன்னிதானத்திற்கு போலீசுக்கு தேவையான பொருள்கள் எடுத்துச் செல்லும் டிராக்டரில் பயணம் செய்து சபரிமலை சென்றதாகவும், பின்னர் 13-ம் தேதி மதியம் சபரிமலையில் இருந்து பாம்பாவுக்கு டிராக்டரில் பயணம் செய்ததாகவும் சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் ஐகோர்ட்டில் ரிப்போர்ட் அளித்தார்.

ஏ.டி.ஜி.பி-யுடன் பர்சனல் செக்யூரிட்டி ஆப்பீசர் ஒருவரும் இருந்ததாகவும் அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டிருந்தது.

ADGP எம்.ஆர்.அஜித்குமார்

இதுகுறித்து விசாரணை நடத்திய கேரளா ஐகோர்ட்  தேவசம்போர்டு பெஞ்ச் போலீஸ் ஏ.டி.ஜி.பி-யை கடுமையாக விமர்சித்திருந்தது. ஏ.டி.ஜி.பி-யின் டிராக்டர் பயணம் துர்பாக்கியமானது எனவும்.  ஏ.டி.ஜி.பி-க்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஆம்புலன்ஸில் சென்று இருக்கலாமே எனவும் கோர்ட் கேள்வி எழுப்பியது.

கோர்ட் விமர்சித்ததை அடுத்து எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் துறை முடிவு செய்தது. அதன்படி ஏ.டி.ஜி.பி-யை விட்டுவிட்டு, அவரை அழைத்துச் சென்ற டிராக்டர் டிரைவர் மீது பம்பா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அலட்சியமாக செயல்பட்டதாகவும், கோர்ட் உத்தரவை மீறி டிராக்டரில் ஆள்களை அழைத்துச் சென்றதாகவும் டிரைவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.பி-யை காப்பாற்ற டிராக்டர் டிரைவரை பலிகடா ஆக்கியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை: அலைக்கழித்த காவல்துறை; சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை; என்ன நடக்கிறது?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து, நண்பகல் நேரத்தில் வீட்ட... மேலும் பார்க்க

``ரூ.50 லட்சம் வாங்கி விட்டு போதைப் பொருள் தரவில்லை..'' - 2 பேரை 10 நாள்கள் சித்ரவதை செய்த கும்பல்

மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சபீர் சித்திக் மற்றும் அவரது நண்பர் சாஜித் எலக்ட்ரிக்வாலா ஆகியோரிடம் போதைப்பொருளை சப்ளை செய்வதற்காக சர்வார் கானும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ.50 லட்சம... மேலும் பார்க்க

புத்த துறவிகளுடன் உறவு; 100 கோடி பணம் பறிப்பு - தாய்லாந்து பெண்ணிடம் 80,000 போட்டோ, வீடியோக்கள்

தாய்லாந்து காவல்துறை, `மிஸ் கோல்ஃப்' (Ms Golf) என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணை கைது செய்துள்ளது. இவர் புத்த மத துறவிகளை பாலியல் உறவுகளுக்கு ஈர்த்து, அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத... மேலும் பார்க்க

Kerala Nurse: ``பிளட் மணி வேண்டாம்; தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்..'' - ஏமன் குடும்பம் சொல்வதென்ன?

ஏமனில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காக கிராண்ட் முஃப்தி ஷேக் காந்தபுரம் ஏ.பி ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிமிஷா பிரியாபிளட் மணி! ஏமன் அடிப்படையில் ... மேலும் பார்க்க

ஜூனியர் மாணவனை கொடூரமாக கொலை செய்து எரித்த சீனியர்கள்; மதுரையில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே ஐ.டி.ஐ மாணவன் கல்லால் தாக்கி எரித்துக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 14 ஆம் தேதி மாலை இளமனூர் கண்மாய்கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் உடல... மேலும் பார்க்க

மது போதையில் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - கோவை மருமகன் கைது

கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில் மகன் உள்ளார். அவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கோவைஇதனால் மணிகண்டன் மது பழக்கத்த... மேலும் பார்க்க