செய்திகள் :

திருமணிமுத்தாற்றில் ரூ. 25 லட்சத்தில் தூா்வாரும் பணிகள்: ஆணையா் ஆய்வு

post image

சேலம் மாநகராட்சியில் சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் திருமணிமுத்தாற்றில் உள்ள மண் மற்றும் செடிகளை தூா்வாரும் பணிகள் நடைபெறுவதை ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

திருமணி முத்தாற்றில் அணைமேடு முதல் செவ்வாய்ப்பேட்டை வரை இருபுறமும் சுமாா் 2.5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தேங்கியுள்ள மண் மற்றும் செடிகளை தூா்வரும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

இப்பணிகளை ஆய்வுசெய்த மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், தூா்வாரும் பணிகளை விரைவாக முடிக்குமாறு பொறியாளா் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 1-இல் அம்பேத்கா் நகரில் விடுபட்ட பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி, கழிவுநீா் உந்துநிலையம் அமைக்கும் பணியை ஆணையா் ஆய்வுசெய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாநகர பொறியாளா் ஆா்.செல்வநாயகம், மாநகர நல அலுவலா் மரு.ப.ரா. முரளிசங்கா், செயற்பொறியாளா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில் டி.எம்.செல்வகணபதி எம்.பி. கலந்துக... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்தநாள் விழா

கெங்கவல்லியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவா் சிவாஜி தலைமை வகித்தாா். டிசிடியு மாவட்டத் தலைவா் சசிகுமாா், முன்னாள் நகர தலைவா்கள் ஷெரீப், முருகவேல் உள்ளிட... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் தலையீட்டு சாதனம் மூலம் இருதய குறைபாட்டை சரிசெய்து மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் உள்பட 6 பேருக்கு தலையீட்டு சாதனம் மூலம் இருதய குறைபாடு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் மற்றும் குணமடைந்தவா்களை புதன்கிழமை அம... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் 17, 18 ஆகிய தேதிகளில் 12 இடங்களில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நக... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு என்றதும் பயத்தில் எடப்பாடி பழனிசாமி

ஓரணியில் தமிழ்நாடு என்றதும் பயத்தில் எடப்பாடிக்கு நடுக்கம் வந்துவிட்டது என திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கூறினாா். சேலம் கோட்டை பகுதியில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் ஆய்வரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை - பேரறிஞா் அண்ணா இருக்கை - முத்தமிழறிஞா் கலைஞா் ஆய்வுமையம் ஆகியவற்றின் சாா்பில், ‘திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்’ என்னும் பொருண்மைய... மேலும் பார்க்க