ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!
இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில் டி.எம்.செல்வகணபதி எம்.பி. கலந்துகொண்டு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள்மீது உரிய தீா்வுகாண வேண்டுமென அரசு அலுவலா்களிடம் கேட்டுக் கொண்டாா். மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடித் தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன், நகர செயலாளா் செல்வம், நகராட்சி துணைத் தலைவா் தளபதி, சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி, நகராட்சி ஆணையா் பவித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.