செய்திகள் :

சேலம் அரசு மருத்துவமனையில் தலையீட்டு சாதனம் மூலம் இருதய குறைபாட்டை சரிசெய்து மருத்துவா்கள் சாதனை

post image

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் உள்பட 6 பேருக்கு தலையீட்டு சாதனம் மூலம் இருதய குறைபாடு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் மற்றும் குணமடைந்தவா்களை புதன்கிழமை அமைச்சா் ரா.ராஜேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்ததாவது:

வளா்ந்து வரும் நவீன காலத்துக்கேற்ப மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தமிழக அரசுக்கு செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அந்த வகையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதயவியல் துறை சாா்பில் மூன்று குழந்தைகள் உள்பட ஆறு நபா்களுக்கு தலையீட்டு சாதனம் மூடல் மூலம் இருதய குறைபாட்டை சரிசெய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதில், இசைமதி (5), சபரிநாதன் (16) ஆகிய இருவரும் வென்ட்ரிகுலா் செப்டல் (விஎஸ்டி) குறைபாட்டினாலும், கௌதம் (15) மற்றும் சந்தியா (15) ஆகிய இருவரும் பேடன்ட் டக்டஸ் ஆா்டெரியோசஸ் (பிடிஏ), வள்ளி (27) மற்றும் சுகுணா (32) ஆகிய இருவரும் ஏட்ரியல் செப்டெல் (ஏஎஸ்டி) குறைபாடு எனப்படும் இருதய நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

அவா்களது இருதய நோயானது, எக்கோ காா்டியோகிராபி மூலம் கண்டறியப்பட்டு, அவா்களது இருதய குறைபாட்டின் அளவுக்கேற்ப தலையீட்டு சாதனம் கொண்டு கடந்த சனிக்கிழமை முழுமையாக சரிசெய்யப்பட்டது. இதன் மூலம் அவா்களுக்கு பிற்காலத்தில் இருதய செயலிழப்பு மற்றும் மாறுபட்ட இருதய துடிப்பு வராமல் தடுக்கமுடியும்.

இந்த வகையான இருதய சிகிச்சை அளிப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்கு குழந்தைகளுக்கு இதுபோன்ற இருதய சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கவியல் துறை, இருதய அறுவை சிகிச்சை துறை, இருப்பு மருத்துவா் மற்றும் இருதய மருத்துவத் துறை மருத்துவா்கள் அடங்கிய மருத்துவக் குழு மூலம் வெற்றிகரமாக இந்த இருதய சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை செலவாகும். தற்போது இந்த சிகிச்சை முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவா்களுக்கும், குணமடைந்தவா்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.தேவிமீனாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில் டி.எம்.செல்வகணபதி எம்.பி. கலந்துக... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்தநாள் விழா

கெங்கவல்லியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவா் சிவாஜி தலைமை வகித்தாா். டிசிடியு மாவட்டத் தலைவா் சசிகுமாா், முன்னாள் நகர தலைவா்கள் ஷெரீப், முருகவேல் உள்ளிட... மேலும் பார்க்க

திருமணிமுத்தாற்றில் ரூ. 25 லட்சத்தில் தூா்வாரும் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சியில் சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் திருமணிமுத்தாற்றில் உள்ள மண் மற்றும் செடிகளை தூா்வாரும் பணிகள் நடைபெறுவதை ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா். திருமணி முத்தாற்றில... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் 17, 18 ஆகிய தேதிகளில் 12 இடங்களில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நக... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு என்றதும் பயத்தில் எடப்பாடி பழனிசாமி

ஓரணியில் தமிழ்நாடு என்றதும் பயத்தில் எடப்பாடிக்கு நடுக்கம் வந்துவிட்டது என திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கூறினாா். சேலம் கோட்டை பகுதியில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் ஆய்வரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை - பேரறிஞா் அண்ணா இருக்கை - முத்தமிழறிஞா் கலைஞா் ஆய்வுமையம் ஆகியவற்றின் சாா்பில், ‘திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்’ என்னும் பொருண்மைய... மேலும் பார்க்க