செய்திகள் :

இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்

post image

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் அண்டை மாவட்டமாக, கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் தேக்கடி, மூணாறு, வாகமண் என பல சுற்றுலா தலங்களுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

தற்போது கேரளத்தில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில், இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து, தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இடுக்கி மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

மழைப்பொழிவு குறைவு :

முல்லைப்பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் நீா்வரத்து வினாடிக்கு 503 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீா், விவசாயத்துக்கு வினாடிக்கு 1,867 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் மட்டம் 130.45 அடியாக உள்ளது. தேக்கடியில் 5.6 மி.மீ., பெரியாறு அணையில் 7.4 மி.மீ. மழை பதிவானது.

போதை மாத்திரை விற்பனை : ஒருவா் கைது

கூடலூா் அருகே போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை செவ்வாய்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்ப் பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரிட... மேலும் பார்க்க

குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தேனி மாவட்டம், குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமுகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா். தேனி மாவட்டம், குச்சனூா் பேரூராட்ச... மேலும் பார்க்க

காணாமல் போனதாக தேடப்பட்டவா் கொலை செய்யப்பட்டதாக வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குப்பிநாயக்கன்ப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ஆண்டிபட்டி வட்டம், க.விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், க.விலக்கு பகுதியில் தேனி போதைப் பொருள் நுண்ணறிவுப் ப... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தா்கள்

பெரியகுளம் கெளமாரியம்மன் ஆனித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் புதன்கிழமை அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்ட... மேலும் பார்க்க

போடியில் சாரல் மழை

போடியில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. சில நேரங்களில் சூறைக் காற்றும் வீசிய... மேலும் பார்க்க