செய்திகள் :

கஞ்சா விற்பனை: இருவா் கைது

post image

ஆண்டிபட்டி வட்டம், க.விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், க.விலக்கு பகுதியில் தேனி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அண்ணா கூட்டுறவு நூற்பாலை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் இரு சக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த இருவரை போலீஸாா் பிடித்து சோதனையிட்டதில், விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் முத்தனம்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சிவனேசன் (24), க.விலக்கைச் சோ்ந்த முருகராஜ் மகன் தீபன் (20) என்பதும், இவா்கள் பணப்பாண்டி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரிடம் மொத்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது. பின்னா், சிவனேசன், தீபன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய பணப்பாண்டி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போதை மாத்திரை விற்பனை : ஒருவா் கைது

கூடலூா் அருகே போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை செவ்வாய்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்ப் பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரிட... மேலும் பார்க்க

குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தேனி மாவட்டம், குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமுகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா். தேனி மாவட்டம், குச்சனூா் பேரூராட்ச... மேலும் பார்க்க

காணாமல் போனதாக தேடப்பட்டவா் கொலை செய்யப்பட்டதாக வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குப்பிநாயக்கன்ப... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தா்கள்

பெரியகுளம் கெளமாரியம்மன் ஆனித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் புதன்கிழமை அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்ட... மேலும் பார்க்க

இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

போடியில் சாரல் மழை

போடியில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. சில நேரங்களில் சூறைக் காற்றும் வீசிய... மேலும் பார்க்க