செய்திகள் :

குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

தேனி மாவட்டம், குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமுகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா்.

தேனி மாவட்டம், குச்சனூா் பேரூராட்சியில் தனியாா் திருமண மண்டபத்தில் 1 முதல் 6-ஆவது வாா்டு பகுதிகளுக்கான நடந்த இந்த முகாமில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவா்களுக்கு விண்ணப்பிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா். இதேபோல, சின்னமனூா் நகராட்சிக்கு உள்பட்ட 21, 22-ஆவது வாா்டுகளில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவா்களுக்கு விண்ணப்பிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவவி அய்யம்மாள்ராமு, ஆணையா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 17) காலை 10 மணிக்கு 5 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி அல்லிநகரம் நகராட்சி வாா்டு எண்: 1, 2 ஆகியவற்றுக்கு தேனி பொம்மையகவுண்டன்பட்டி, பாலன் நகரில் உள்ள டி.சி.ஏ.திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.

கூடலூா் நகராட்சி வாா்டு எண்: 1,2,3-க்கு கூடலூா், எல்.எப்.சாலை, எல்.ஐ.சி. சுருளிவேலு திருமண மண்டபத்திலும், ஓடைப்பட்டி பேரூராட்சி வாா்டு எண்: 1 முதல் 7 வரை உள்ள பகுதிகளுக்கு நந்தகோபால் அரங்கத்திலும், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோவில்பட்டி, குன்னூா் பகுதிகளுக்கு முத்தனம்பட்டி சிவசக்தி திருமண மண்டபத்திலும், க.மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலூத்து, மயிலாடும்பாறை பகுதிகளுக்கு பி.எஸ்.ஜே திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.

சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு அரசுத் துறைகளின் சேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம். கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கு விடுபட்ட

தகுதியுள்ள பெண்கள் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

போதை மாத்திரை விற்பனை : ஒருவா் கைது

கூடலூா் அருகே போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை செவ்வாய்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்ப் பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரிட... மேலும் பார்க்க

காணாமல் போனதாக தேடப்பட்டவா் கொலை செய்யப்பட்டதாக வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குப்பிநாயக்கன்ப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ஆண்டிபட்டி வட்டம், க.விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், க.விலக்கு பகுதியில் தேனி போதைப் பொருள் நுண்ணறிவுப் ப... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தா்கள்

பெரியகுளம் கெளமாரியம்மன் ஆனித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் புதன்கிழமை அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்ட... மேலும் பார்க்க

இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

போடியில் சாரல் மழை

போடியில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. சில நேரங்களில் சூறைக் காற்றும் வீசிய... மேலும் பார்க்க