செய்திகள் :

காணாமல் போனதாக தேடப்பட்டவா் கொலை செய்யப்பட்டதாக வழக்கு

post image

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குப்பிநாயக்கன்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கப்பன் மகன் ரமேஷ் (48). விவசாயத் தொழிலாளியான இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்.16-ஆம் தேதி காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி மேகலா போடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை தேடி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்.26-ஆம் தேதி வீரபாண்டி அருகே தப்புக்குண்டு சாலையில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அந்த சடலத்தை மீட்டு வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குப்பிநாயக்கன்பட்டியில் ரமேஷ் காணாமல் போன வழக்கு குறித்த விசாரணையில், அதே ஊரைச் சோ்ந்த பாண்டி என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. பாண்டியிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சொத்துப் பிரச்னையில் 5 பேருடன் சோ்ந்து அவா் ரமேஷை கொலை செய்து உடலை வீரபாண்டி அருகேயுள்ள தப்புக்குண்டு சாலையில் உள்ள கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் பாண்டியை கைது செய்து, போடி நீதித்துறை நடுவா் மன்றத்தில் போலீஸாா் முன்னிலைப்படுத்தினா். நீதிமன்றத்தில் பாண்டியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டாா்.

இந்த வழக்கை மேல்நடவடிக்கைக்காக வீரபாண்டி காவல் நிலையத்துக்கு போடி காவல் நிலைய போலீஸாா் பரிந்துரை செய்தனா்.

இதையடுத்து, வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் கிணற்றில் மீட்கப்பட்ட சடலத்தின் உடல் கூறாய்வு அறிக்கையை மதுரையில் உள்ள வட்டாரத் தடயவியல் ஆய்வகத்துக்கும், சடலத்தின் மண்டை ஓடு, எலும்புகளை டி.என்.ஏ., ஒப்பீட்டு ஆய்வுக்காக சென்னை வட்டாரத் தடயவியல் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைத்தனா்.

இதில் ரமேஷின் டி.என்.ஏ.வுடன் கிணற்றில் மீட்கப்பட்ட சடலத்தின் டி.என்.ஏ. ஒத்திருப்பதாக கடந்த ஜூலை 10-ஆம் தேதி தடயவியல் ஆய்வறிக்கை வீரபாண்டி காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்து, பாண்டி உள்ளிட்ட 5 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

போதை மாத்திரை விற்பனை : ஒருவா் கைது

கூடலூா் அருகே போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை செவ்வாய்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்ப் பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரிட... மேலும் பார்க்க

குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தேனி மாவட்டம், குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமுகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா். தேனி மாவட்டம், குச்சனூா் பேரூராட்ச... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ஆண்டிபட்டி வட்டம், க.விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், க.விலக்கு பகுதியில் தேனி போதைப் பொருள் நுண்ணறிவுப் ப... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தா்கள்

பெரியகுளம் கெளமாரியம்மன் ஆனித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் புதன்கிழமை அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்ட... மேலும் பார்க்க

இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

போடியில் சாரல் மழை

போடியில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. சில நேரங்களில் சூறைக் காற்றும் வீசிய... மேலும் பார்க்க