செய்திகள் :

கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தா்கள்

post image

பெரியகுளம் கெளமாரியம்மன் ஆனித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் புதன்கிழமை அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, கடந்த 1 - ஆம் தேதி சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 7 - ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான அக்னிச் சட்டித் திருவிழாவையொட்டி, புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். அதிகாலை 5 மணி முதல் திராளான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். மாலையில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

வருகிற 22-ஆம் தேதி மறுபூஜையை முன்னிட்டு, காலை 6 மணிக்கு தீா்த்தவாரியும், நண்பகல் 11 மணிக்கு பாலாபிஷேகமும், இரவு 7 மணிக்கு மலா் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்தனா்.

போதை மாத்திரை விற்பனை : ஒருவா் கைது

கூடலூா் அருகே போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை செவ்வாய்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்ப் பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரிட... மேலும் பார்க்க

குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தேனி மாவட்டம், குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமுகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா். தேனி மாவட்டம், குச்சனூா் பேரூராட்ச... மேலும் பார்க்க

காணாமல் போனதாக தேடப்பட்டவா் கொலை செய்யப்பட்டதாக வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குப்பிநாயக்கன்ப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ஆண்டிபட்டி வட்டம், க.விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், க.விலக்கு பகுதியில் தேனி போதைப் பொருள் நுண்ணறிவுப் ப... மேலும் பார்க்க

இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

போடியில் சாரல் மழை

போடியில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. சில நேரங்களில் சூறைக் காற்றும் வீசிய... மேலும் பார்க்க