செய்திகள் :

யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட விவசாயிகள் கோரிக்கை

post image

காட்டு யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலம் வட்டம் பெரியகுளம், புளியங்கோம்பை பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்: பெரியகுளம், புளியங்கோம்பை பகுதிகளில் 2,000 -க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு தென்னை, வாழை, சம்பங்கி, செண்டு மல்லி, மல்லி உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வனப் பகுதியில் வறட்சி ஏற்படும்போது வன விலங்குகள் உணவைத் தேடி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் எங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

எங்கள் பகுதியில் ஏற்கெனவே வெட்டப்பட்ட அகழிகள் மழை காரணமாக நிரம்பி விட்டன. இதனால் அந்த அகழிகளை யானைகள் எளிதில் கடந்து விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி விடுகின்றன. பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்களால் ஒலி எழுப்பியும் யானைகளைக் காட்டுக்குள் விரட்டி வருகிறோம். பெரும்பாலும் இரவு நேரங்களில் யானைகள் வனப் பகுதியைவிட்டு வெளியே வருவதால் விவசாயத் தோட்டங்களில் வசிக்கும் எங்களுக்கு மிகுந்த அச்சமாக உள்ளது.

பகல் நேரங்களில் யானைகள் வந்தால் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்து விடுகிறோம். அவா்கள் வந்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி விடுகின்றனா். ஆனால் இரவு நேரத்தில் காட்டு யானைகள் வந்தால் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே சத்தியமங்கலம் அருகே வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும். வனப் பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியேறும் இடங்களைக் கண்டறிந்து அங்கு புதிதாக அகழி வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 இல் தொடக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ... மேலும் பார்க்க

சென்னிமலை ஒன்றியத்தில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் 6 சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டிச்சிபாளைம், புங்கம்பாடி மற்றும் குமாரவலசு ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் ஆறு சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு நவீன உடற்கூறு ஆய்வுக் கூடம் கட்ட பூமி பூஜை

பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக நவீன உடற்கூறு ஆய்வுக் கூடக் கட்டடம் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் த. ரவி... மேலும் பார்க்க

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் சடலம் எரிப்பு

அந்தியூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சடலம் போலீஸாருக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தியூரை அடுத்த நகலூா், கொண்டையம்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா் ம... மேலும் பார்க்க