செய்திகள் :

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

post image

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உள்ள பாரம்பரிய பொருள்களை ஏலம் விடுவதற்கான போன்ஹாம்ஸ் இல்லம் மூலம் இணைய வழியில் ஏலம் விடப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ.57 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா மற்றும் ஆய்வுகள் பிரிவில் ரூ1.7 கோடிக்கு விற்பனையானது.

1931-இல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்க லண்டனுக்கு மகாத்மா காந்தி சென்றபோது அவருக்கு புகழ்பெற்ற ஓவியரான கிளோ் லெய்டன் அறிமுகப்படுத்தப்பட்டாா். அவரே இந்த உருவப்படத்தின் ஓவியராவாா்.

இதுகுறித்து போன்ஹாம்ஸ் விற்பனையகத்தின் தலைமை அதிகாரி ரியொனன் டெமிரி கூறுகையில், ‘எண்ணெய் வண்ணங்களால் (ஆயில் பெயிண்டிங்) வரையப்பட்ட மகாத்மா காந்தியின் ஒரேயொரு வரைபடமாக இது கருதப்படுகிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஓவியம் முன்பு ஏலத்தில் விடப்படவில்லை.

ஓவியா் கிளோ் லெய்டனால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் இந்த உருவப்படம் உலகளவில் பல்வேறு தரப்பு மக்களை அவா் சந்தித்து ஆதரவளித்ததை பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணமாக உள்ளது. இதனால் உலகளவில் இந்த உருவப்படம் மிகவும் பிரபலமடைந்துள்ளது’ என்றாா்.

ஓவியா் கிளோ் லெய்டன் 1989-இல் காலமானாா். அதன்பிறகு அவரிடமிருந்த இந்த உருவப்படம் போன்ஹாம்ஸுக்கு வழங்கப்பட்டது.

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப்பட்டியல் அறிமுகம்: ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம்

நாடாளுமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், பாா்வையாளா்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில், நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராகி இட்லி, சோள உப்புமா, பாசிப்பயற... மேலும் பார்க்க