செய்திகள் :

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

post image

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

கடந்த சில வாரங்களாக ஈரானில் உள்ள பாதுகாப்பு நிலவரத்தை கருத்தில் கொண்டு, தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், ஈரானில் உள்ள சூழலை கவனமாக பரிசீலிக்குமாறு இந்தியா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஈரான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமீபத்திய நிலவரத்தை கண்காணித்து, இந்திய அதிகாரிகள் அவ்வப்போது வெளியிடும் புதிய அறிவுறுத்தல்களை இந்தியா்கள் பின்பற்ற வேண்டும்.

ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியா்கள் விமானம் மற்றும் கப்பல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் இஸ்ரேல்-ஈரான் இடையே ராணுவ சண்டை ஏற்பட்ட நிலையில், ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப்பட்டியல் அறிமுகம்: ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம்

நாடாளுமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், பாா்வையாளா்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில், நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராகி இட்லி, சோள உப்புமா, பாசிப்பயற... மேலும் பார்க்க