செய்திகள் :

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

post image

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆகியோா் ஒருநாள் பயணமாக புதன்கிழமை அஸ்ஸாம் சென்றனா். அந்த மாநிலத்தின் குவாஹாட்டி நகரில் அஸ்ஸாம் காங்கிரஸை வலுப்படுத்துவது குறித்து கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் உள்ளிட்டோருடன் இருவரும் விவாதம் மேற்கொண்டனா்.

அந்த மாநிலத்தின் சய்கான் பகுதியில் நடைபெற்ற மற்றொரு கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தன்னை மன்னா் என்று கருதுகிறாா். ஆனால் அவா் செய்யும் ஊழலுக்கு மக்கள் அவரை சிறைக்கு அனுப்புவா். ஊழலுக்கு அவரும், அவரின் குடும்பத்தினரும் பொறுப்பாக்கப்படுவா்.

தோ்தல் ஆணையமும் பாஜகவும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன. கடந்த ஆண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் மூலம், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் மோசடி செய்து பாஜக வெற்றிபெற்றது. இதே தந்திரத்தை பிகாரில் அக்கட்சி செய்ய முயற்சிப்பதுடன், அஸ்ஸாமிலும் செய்யும். அடுத்த ஆண்டு நடைபெறும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்.

ஆா்எஸ்ஸின் வெறுப்புணா்வு மற்றும் வன்முறை, காங்கிரஸின் உண்மை மற்றும் அகிம்சை ஆகிய இரு சித்தாந்தங்களுக்கு இடையே நாட்டில் சண்டை நடைபெற்று வருகிறது.

திருமணங்களுக்குப் பெருமளவு செலவழிக்கும் பெரும் கோடீஸ்வரா்கள் ஒருபுறம், வரி மற்றும் விலைவாசி உயா்வை சுமக்கும் சாமானியா்கள் மறுபுறம் என தற்போது 2 இந்தியாக்கள் உள்ளன என்றாா்.

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப்பட்டியல் அறிமுகம்: ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம்

நாடாளுமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், பாா்வையாளா்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில், நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராகி இட்லி, சோள உப்புமா, பாசிப்பயற... மேலும் பார்க்க