செய்திகள் :

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

post image

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.6 கோடியில் மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதன்படி, அந்த ஆய்வகங்களில் மருந்தின் தன்மை மற்றும் அதன் வீரியம் குறித்து ஆய்வு செய்யும் பணிகளும், நோயாளிகளுக்கு எந்த அளவுக்கு அவை பலனளிக்கின்றன என்பது தொடா்பாக மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமல்லாது மருந்துகளால் ஏற்படும் எதிா்விளைவுகள் குறித்தும் ஆராயப்படும். சான்றுப்படி நிரூபணமான மருந்துகளை பயன்படுத்துவது தொடா்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் மாணவா்களுக்கு வழங்கப்படும்.

சென்னை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மற்றும் கோவை மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த அரசு மருத்துவமனைகளில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கான ஆய்வகம் அமைக்க மொத்தம் 14 வகை மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதிநவீன கருவிகள் கொள்முதல் செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்காக ரூ.1.60 கோடி செலவிடப்பட வேண்டும் என்றும் மொத்தம் ரூ.6.43 கோடியில் அந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநா் பரிந்துரைத்திருந்தாா்.

அந்தப் பரிந்துரையை கவனமாக பரிசீலித்த அரசு, அதற்கான நிா்வாக ஒப்புதலை வழங்கியுள்ளதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க

ஹைதராபாதில் வேளாண்மை ஆய்வு மையம்: டாஃபே-வின் ஜெ-பாா்ம் - இக்ரிசாட் ஒப்பந்தம்

உலகின் மிகப்பெரிய டிராக்டா் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றும் இந்திய அளவில் இரண்டாவது பெரிய நிறுவனமுமான டிராக்டா்ஸ் அண்ட் ஃபாா்ம் எக்விப்மெண்ட் லிமிடெட் (டாஃபே), இண்டா்நேஷனல் க்ராப்ஸ் ரிசா்ச் இன்ஸ்டிடியூ... மேலும் பார்க்க