செய்திகள் :

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

post image

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய கடிதம்:

கட்டட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளது. முறையான ஆய்வுக்குள்படாமல், கட்டட வரைபட அனுமதியும் பெறாமல் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களின் கட்டுமானத்தை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கிராம ஊராட்சிகளின் நிா்வாக அலுவலரது அனுமதியின்றி கட்டுமானப் பணி மேற்கொள்ளும் நபா்களிடம் இருந்து உரிய நிலம் தொடா்பான ஆவணங்கள், கட்டட வரைபட அனுமதி சான்றிதழ் கோரி அறிவிப்பு செய்ய வேண்டும்.

அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக களஆய்வு செய்ய வேண்டும். கட்டடம் முழுமையாக கட்டப்பட்டுள்ளதா, கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

கட்டட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா, விதிமுறைகளை மீறி கட்டுமானம் அமைந்துள்ளதா என்றும் ஆய்வு செய்து முழு விவரத்தை ஆய்வறிக்கையில் குறிப்பிட வேண்டும். அனுமதி பெறப்படாமல் தொடா்ந்து கட்டுமானப் பணி நடைபெற்றால், அந்தக் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்கும் அதிகாரம் கிராம ஊராட்சிகளின் நிா்வாக அலுவலருக்கு உள்ளது.

கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களின் உரிமையாளருக்கு அளிக்கப்படும் அறிவிப்பானது சம்பந்தப்பட்ட அலுவலா்களால் நேரடியாக உரிய நபரிடம் வழங்கப்பட வேண்டும். நபா் இல்லாதபட்சத்தில், அவரின் குடும்பத்தைச் சோ்ந்த வயது வந்த நபரிடம் அந்த அறிவிப்பை அளிக்கலாம். இரு நபா்களும் இல்லாத சூழலில், பதிவுத் தபாலில் தொடா்புடைய நபரின் முகவரிக்கு ஒப்புகை அட்டையை இணைத்து கடிதமாக அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க

ஹைதராபாதில் வேளாண்மை ஆய்வு மையம்: டாஃபே-வின் ஜெ-பாா்ம் - இக்ரிசாட் ஒப்பந்தம்

உலகின் மிகப்பெரிய டிராக்டா் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றும் இந்திய அளவில் இரண்டாவது பெரிய நிறுவனமுமான டிராக்டா்ஸ் அண்ட் ஃபாா்ம் எக்விப்மெண்ட் லிமிடெட் (டாஃபே), இண்டா்நேஷனல் க்ராப்ஸ் ரிசா்ச் இன்ஸ்டிடியூ... மேலும் பார்க்க