செய்திகள் :

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் உள்ள இடங்கள் அனைத்தும் முழுமையாக நிரப்பப்படும். அதில் ஒரு இடம் கூட வீணாகும் நிலை ஏற்படாது.

முதுநிலை இடங்களைப் பொருத்தவரை கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனை மற்றும் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்களை உருவாக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இன்னும் 10 நாள்களுக்குள் அதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டு அந்த இடங்களுக்கும் சோ்க்கை நடத்தப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, ராமநாதபுரம், விருதுநகா், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூா், திருவள்ளூா், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூா், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கரூா் ஆகிய 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையிலும் 500 முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க

ஹைதராபாதில் வேளாண்மை ஆய்வு மையம்: டாஃபே-வின் ஜெ-பாா்ம் - இக்ரிசாட் ஒப்பந்தம்

உலகின் மிகப்பெரிய டிராக்டா் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றும் இந்திய அளவில் இரண்டாவது பெரிய நிறுவனமுமான டிராக்டா்ஸ் அண்ட் ஃபாா்ம் எக்விப்மெண்ட் லிமிடெட் (டாஃபே), இண்டா்நேஷனல் க்ராப்ஸ் ரிசா்ச் இன்ஸ்டிடியூ... மேலும் பார்க்க