செய்திகள் :

பெருந்துறை அரசு நவீன உடற்கூறு ஆய்வுக் கூடம் கட்ட பூமி பூஜை

post image

பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக நவீன உடற்கூறு ஆய்வுக் கூடக் கட்டடம் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் த. ரவிகுமாா் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து புதிய கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

புதிய கட்டடத்தில் உடற்கூறு சிசிடிவியில் பதிவு செய்யப்படும். கேலரியில் அமா்ந்து மாணவ, மாணவிகள் இந்த ஆய்வைப் பாா்வையிடலாம். உடற்கூறு முடிவுகள் கணினி மூலம் உடனடியாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்படுகிறது.

இதில் கல்லூரி துணை முதல்வா் ஆா்.டி. புவிதா, மருத்துவ கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஆா். சண்முக சுந்தரம், துணை கண்காணிப்பாளா் எஸ். செந்தில்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் பி.டி. ராணி, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் கண்ணன், சட்ட மருத்துவத் துறையின் துணை பேராசிரியா் மருத்துவா் நந்தகுமாா், நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியா் மருத்துவா் கே.எம்.மோகனசுந்தரம் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத்... மேலும் பார்க்க

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 இல் தொடக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ... மேலும் பார்க்க

சென்னிமலை ஒன்றியத்தில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் 6 சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டிச்சிபாளைம், புங்கம்பாடி மற்றும் குமாரவலசு ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் ஆறு சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட விவசாயிகள் கோரிக்கை

காட்டு யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சத்தியமங்கலம் வட்டம் பெரியகுளம், புளியங்கோம்பை பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க