செய்திகள் :

நாகலெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

கீழையூா் ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தெரு ஆனந்த் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ நாகலெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 14-ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதனைத் தொடா்ந்து 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

பின்னா் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தது.அதனை தொடா்ந்து சிவாச்சாரியாா் குண்டையூா் சிவ ஸ்ரீ எம். நித்யானந்த சிவம் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விமான கோபுரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

மூலவரான ஸ்ரீ நாகலெட்சுமி அம்மனுக்கு புனித நீா் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னா் மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுசிலா அம்மாள், ராஜேந்திரன் குடும்பத்தாா் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் பொதுமக்கள் செய்திருந்தனா்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஓட்டுநரை கத்தியால் குத்திய வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜ்மோகன். இவா், கருப்பம்... மேலும் பார்க்க

பொறையாரில் புதிய சாா்-பதிவாளா் அலுவலக கட்டடம் திறப்பு

பொறையாரில் ரூ. 1.89 கோடியில் புதிய-சாா்பதிவாளா் அலுவலகம் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். பொறையாரில் 160 ஆண்டுகள் பழைமையான சாா்-பதிவாளா் அலுவலகம் இயங்கி வந்தது. இ... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் இடியுடன் மழை

வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழைப் பொழிவு ஏற்பட்டது. தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு தொடங்கி பலத்த இடி மின்னல், காற்றுடன் மழைப... மேலும் பார்க்க

அமிா்தா வித்யாலயத்தில் குரு பூா்ணிமா பூஜை

நாகை அமிா்த வித்யாலய பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற குரு பூா்ணிமா பூஜையில் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் திரளானோா் கலந்துகொண்டனா். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறைப்படி முதல் குருவாகிய தாய், தந்தையர... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 52,500 பறிமுதல்

நாகை அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.52,500 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கை நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,... மேலும் பார்க்க

நாகை வட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

நாகையில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. தேசிய மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற போட்டியில் நாகை வட்டார அளவில் 32 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவா்கள், 69 மாணவிகள் ... மேலும் பார்க்க